Pixel Forest Turicum

சுவிஸ் கலைஞை Pipilotti Rist அவர்கள் (1962) பிரபல சூரிச் நகர கலைக்கூடத்தில் ( Zurich Kunsthaus) தனது கலை வேலைப்பாடொன்றை காட்சிப்படுத்தியுள்ளார். நவீன தொழில்நுட்பங்களையும் (கணனி, LED விளக்குகள்), கணக்கிடல்களையும் பாவித்து மண்டபம் ஒன்றை வேறு உலகமாக சிருஸ்டித்துள்ளார். 3000 லெட் விளக்குகள் ‘பளிங்குச் சிற்பி’க்குள் ஒளிர தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

Continue reading “Pixel Forest Turicum”

நெருக்கடி

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவு இலங்கை. நாம் ரின் மீனை இறக்குமதி செய்கிறோம். நிலமும் நீர்வளமும் வெயிலும் மழையும் உள்ள இந்த நிலத்தில் காய்கறிகளுக்காக அழுகிறோம். வீட்டுத் தோட்டங்களும் பற்றை வளர்ந்து கிடக்க மோட்டார் சைக்கிளில் ஊர்சுற்றுகிறோம். சில நூறு மீற்றர் தொலைவிலுள்ள கடையில் ஒரு கிலோ வெங்காயம் வாங்க மோட்டார் சைக்கிளை கலைக்கிறோம். யாழ்ப்பாண வாழ்நிலை இது. புகலிடம் வடபகுதிக்குள் காவி வந்த பவுசு, சொகுசு கலாச்சாரம் இதில் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறது.

Continue reading “நெருக்கடி”

யொஹானியின் பாடல்

யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.

Continue reading “யொஹானியின் பாடல்”

வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !

Thanks for vdo : Accounting Miracle Tamil

ஈழத்தில் சாதிய மனநிலை மீண்டும் வன்முறையை முன்னுக்குத் தள்ளி வீரியமடைவதை வட்டுக்கோட்டையில் 19.09.2021 நடந்த சாதிய ரீதியிலான தாக்குதல் நிரூபித்துள்ளது. வெறும் கையுடன் தமது அன்றாட வாழ்வை கூலித்தொழில் மூலம் ஓட்டிக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வேலைவெட்டியின்றி வெளிநாட்டுப் பணத்தில் சீவியம் நடத்தும் ஆதிக்கசாதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வாள்சுழற்றியிருக்கிறார்கள். அரை மணித்தியாலம் அந்தத் தெருவையே கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள்.

Continue reading “வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !”

துணிச்சல்காரி

Malalai Joya

thanks for image : ctv news

மேற்குலகின் தயாரிப்பாகி நோபல் பரிசுவரை சென்றிருக்கும் மலாலாய் அல்ல இந்த மலாலை. இவர் மேற்குலகையும் விமர்சிக்கும் மலாலாய் யோயா

இந்ததத் துணிச்சலான ஆப்கான் பெண்ணை தெரிந்துவைத்திருங்கள். இவை பழைய காணொளிகளும் பதிவுகளும். அறிமுகத்திற்காக இங்கு பதிகிறேன். தற்போதைய ஆப்கான் நிலைமையில் இந்த துணிச்சல்காரியின் பாதுகாப்பு முக்கியம். அவளது குரல் வெளிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

// ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும்தான் இந்த குழுவில் இருக்கப்போகிறவர்கள். அரசியலைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவில் யார்யாரெல்லாம் இருக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளோடுதான் நீங்கள் இங்கு வந்து குந்தியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நமது நாட்டின்மீது நடாத்தப்படுகிற போர்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் காரணமானவர்கள். பெண்களுக்கு எதிரான மோசமான ஒடுக்குமுறைகளை செய்பவர்களும் இவர்களே. இவ்வாறான மோசமான கிரிமினல்களிடம்தான் நாட்டின் தலைவிதியை ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகளுக்கு உரியவர்களல்ல. அவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.//

  • இரு பழைய கட்டுரைகள் இவை
  1. https://sudumanal.com/2016/07/16/the-bravest-woman-malalai-joya/
  2. https://sudumanal.com/2015/06/28/dust-in-the-eyes-of-the-world/
  • காணொளி
Continue reading “துணிச்சல்காரி”

ஹிஷாலினிகள்

முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்தப்பட்ட ஹிஷாலினியின் மரணம் உயிர்த்தெழும்பியிருக்கிறது. அது ஒரு குறியீட்டு வடிவமாக மாறியிருப்பதே அதன் சிறப்பம்சம். அது ஹிஷாலினிகள் குறித்த கரிசனையையும், பொதுவெளிக்குள் நிகழ்த்தப்படும் எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படைத்தன்மையையும்; -தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுள்- நிகழ்த்திக்கொண்டிருப்பது முன்னோக்கிய ஒரு மாற்றம்தான். அது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அரசியல் தலையீடுகளற்றதும் நேர்மையானதுமான பொலிஸ் விசாரணையும் நீதிமன்றமும்தான் புலப்படுத்த முடியும்.

Continue reading “ஹிஷாலினிகள்”

புகலிட இலக்கிய யதார்த்தம்

மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலித்தோம்.

Continue reading “புகலிட இலக்கிய யதார்த்தம்”

கொரோனாவும் சீனாவும்

  • டானியல் கன்ஸர்
Dr.Daniele Ganser, Historiker, Philosophie, Publizist

சுவிசின் அறியப்பட்ட வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் 5 பெப்பரவரி இல் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று கொரோனா குறித்தான மிக முக்கியமான ஆய்வாக வந்திருக்கிறது. அந்த ஒன்றே முக்கால் மணி நேரக் காணொளியில் சொல்லப்பட்ட விடயங்களின் சுருக்கத்தை இங்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

Continue reading “கொரோனாவும் சீனாவும்”

P2P

பொத்துவில்லிலிருந்து பொலிகண்டிவரை! – அடையாள நடைப்பயணம்.

image : tgte-homeland.org

அரசியலில் சாத்தியப்பாடுகள் குறித்தே பேசமுடியும். பெரும்பா1லும் வெளித்தெரிகிற சாத்தியப்பாடுகளையே பொதுப்புத்தி முன்வைத்து வியாக்கியானம் செய்யும். வெளித்தெரியாமல் இயங்கும் நுண்ணரசியல் பற்றி புரிவது அவளவு இலகுவல்ல. ஆனால் இந்த நுண்ணரசியலின் உணர்வுதான் சமூக இயங்குதளத்தை நிர்மாணிக்கிறது. அது பொதுப்புத்தியின் வழி செயலூக்கம் பெறுகிறது.

Continue reading “P2P”

பச்சைக் குதிரை


எனது வாசிப்பு

பச்சைக் குதிரை ஒரு விளையாட்டு. அது இங்கே படிமமாக நாவலில் விரிகிறது. குனிஞ்சு நிக்கணும். ஒவ்வொருவரா தாண்டணும். குனிஞ்சு நிக்கிறவங்க மெல்ல உயரத்தைக் கூட்டினாலும் அவங்களைத் தாண்டிற வெறியோடு அவங்க முதுகை அமத்தி பாய்ந்து கடக்க வேண்டும்.

Continue reading “பச்சைக் குதிரை”