காதலா? கத்தரிக்காயா?
கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.
கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.