நிகழ்காலத் துயரம்

மேற்குலகில் கொரோனா மரணங்கள் ஏற்படுத்தியிருக்கிற மோசமான நிலைமை தொடர்கிறது. கொரோனா யுகம் அரசியல் ரீதியில், பண்பாட்டு ரீதியில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற மாற்றங்கள் குறித்து நாம் அதிக அறிதல் பெறவேண்டியிருக்கிற காலம் இது.
கொரோனா மரணங்களில் தமிழர்கள் ஒரு பகுதியினர். இந்த இறப்புகளில் அவர்கள் தனித்து விசேட காரணங்களால் மரணமடையவில்லை. பெருமளவு இளைஞர்கள் சாகிறார்கள் என எந்த புள்ளிவிபரமுமற்ற அறிதலோடு எழுதப்படும் பதிவுகளும், புகலிடத் தமிழர்களின் சிந்தனைப் போக்கை சாடி இந்த மரணங்களை அணுகும் போக்குகளும் அபத்தமானது மட்டுமல்ல மனிதாபிமானமற்றதுமாகும்.

Continue reading “நிகழ்காலத் துயரம்”

பகிர்ந்து வாழ்வோம்

IMG-20200406-WA0056-s-logo

இலங்கையின் இயற்கை அழகின் திரட்சி மலையகம். அதை இப்படியான செழிப்பு பூமியாய் மாற்றி இலங்கையின் அந்நியச் செலாவணியின் முக்கால் பங்கிற்கு மேலான வருமானத்தை ஈட்டித்தருகிற அந்தப் பூமியின் மக்கள் காலாகாலமாகவே திட்டமிடப்பட்ட விதத்தில் ஏழையாக, விளம்புநிலை மக்களாக வைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.

Continue reading “பகிர்ந்து வாழ்வோம்”

உதவ முன்வருவோம் !

இன்றைய ஊரடங்கு நிலை ஈழத்தில் ஏற்படுத்தியுள்ள நிலை அன்றாடங்காய்ச்சியாய் உள்ள மக்களை பெரிதும் பாதித்திருக்கிறது. கொரோனா பற்றிய பயத்தை மேவுகிற விதத்தில் பசி அவர்களை வாட்டுகிறது. தினக் கூலித் தொழில் தடைப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை. தொழில் இல்லை. பசியாற எதுவுமில்லை. வயோதிபர் குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. அரசாங்க நிவாரணம் அரசியல் பாதையினூடாக எவரெவரை போய்ச் சென்றடைகிறது என்பது தெரியாது. இதற்கு உதவ இயலுமானவர்கள் முன்வர வேண்டும். இதற்கு புகலிடத் தமிழர்களும் நாட்டிலுள்ளவர்களும் உதவி அமைப்பு வடிவத்துக்கான ஒரு தேர்ந்த முறைமையை (sytem) வைத்திருப்பது அவசியம். மிகச்சிறு பகுதியினர் இதற்குள் ஆரோக்கியமாக இயங்குவதை அறிந்திருக்கிறேன். திடீர் அனர்த்தங்களின் போதான உதவி அமைப்பு ஒரு தற்காலிகமான (OK அமைப்பு என்பர்) அமைப்பாக இருத்தலும் சாத்தியமானது.

Continue reading “உதவ முன்வருவோம் !”