மேற்குலகில் கொரோனா மரணங்கள் ஏற்படுத்தியிருக்கிற மோசமான நிலைமை தொடர்கிறது. கொரோனா யுகம் அரசியல் ரீதியில், பண்பாட்டு ரீதியில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற மாற்றங்கள் குறித்து நாம் அதிக அறிதல் பெறவேண்டியிருக்கிற காலம் இது.
கொரோனா மரணங்களில் தமிழர்கள் ஒரு பகுதியினர். இந்த இறப்புகளில் அவர்கள் தனித்து விசேட காரணங்களால் மரணமடையவில்லை. பெருமளவு இளைஞர்கள் சாகிறார்கள் என எந்த புள்ளிவிபரமுமற்ற அறிதலோடு எழுதப்படும் பதிவுகளும், புகலிடத் தமிழர்களின் சிந்தனைப் போக்கை சாடி இந்த மரணங்களை அணுகும் போக்குகளும் அபத்தமானது மட்டுமல்ல மனிதாபிமானமற்றதுமாகும்.