Archive for December 2003
தெருவிழா
Posted December 25, 2003
on:- In: கவிதை
- Leave a Comment
எங்கள் வீதியில் இடையிடையே
தெருவிழா களைகட்டும்
அதில்
குரங்குகள் சில வீதியில்
வலம் வருவது வழமையாகிற்று
மலர்களை கசக்கி உதிர்த்து
விசிறி நடந்தன ஒய்யாரமாய்.
மலர்களை, மலர்மாலைகளை எறிந்து
களித்தின்புற்றனர்
மனிதர்கள் சிலர்.
குதூகலம் என்றுமாய்
சிரிப்பு கோபம் கத்தல் நளினம்… என
தெருவெல்லாம் தனதினதாய்
பெருமைகொண்டாடின குரங்குகள்.
மதகு மைந்தர்கள்
Posted December 24, 2003
on:- In: கவிதை
- Leave a Comment
பெண்ணியத்தை ஒரு தோசைபோல்
சுட்டுக் காட்ட
சவால்விட்டபடியே வந்தனர் அவர்கள்.
இரத்தமும் சதையுமாய், உடல்
மாறுதலை நேசித்து
வளர்கிறது
நம்மைச் சுற்றியதெல்லாம் மாறுகிறது
மாறாத தத்துவங்களை திணித்தவர்களும்
காணாமல் போயினர்.
ஆனாலும் கல்தோன்றா காலத்து முன் தோன்றியவர்கள்
நாம்
கலாச்சார உளியுடன் அலைகின்றோம்
பெண்சிலை வடிக்க.