எங்கள் வீதியில் இடையிடையே
தெருவிழா களைகட்டும்
அதில்
குரங்குகள் சில வீதியில்
வலம் வருவது வழமையாகிற்று
மலர்களை கசக்கி உதிர்த்து
விசிறி நடந்தன ஒய்யாரமாய்.
மலர்களை, மலர்மாலைகளை எறிந்து
களித்தின்புற்றனர்
மனிதர்கள் சிலர்.
குதூகலம் என்றுமாய்
சிரிப்பு கோபம் கத்தல் நளினம்… என
தெருவெல்லாம் தனதினதாய்
பெருமைகொண்டாடின குரங்குகள்.