போரும் நிறுத்தமும்

அரசியல் விஞ்ஞானி றிச்சர்ட் ஜே மேர்பி அவர்களின் கருத்துக்கள் இவை.

An army marches on its stomach என்பார்கள் முந்திய போர் முறையில். களத்தில் நிற்கும் இராணுவங்களுக்கான உணவு வழங்கல் மிக முக்கியமானதாக இருந்தது. இப்போ போர்முறை முற்றிலும் வித்தியாசமானது. இன்றைய கள நிலைமை ஏவுகணைகளாலும் ட்றோண்களாலும் ஆளப்படுகிறது. அவற்றின் வழங்கல் என்பது இப்போதைய போர்முறையில் முக்கியமானது.

Continue reading “போரும் நிறுத்தமும்”

ஈரானை விளங்கிக் கொள்ளல்!

பேராசிரியர் Patrick Ringgenberg அவர்களின் விளக்கம்

// அமெரிக்கா புவியியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடவுள் போரை தோற்றுவித்தார்//

– Mark Twain (1835-1910, அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர்).

4000 வருட வரலாறு கொண்ட ஈரானின் பண்பாடு குறித்து 250 வருட பண்பாடு கொண்ட அமெரிக்காவும், வெறும் 77 வருட பண்பாடு கொண்ட இஸ்ரேலும் எமக்கு அமைத்துத் தருகிற பிம்பத்தை மேற்குலக ஊடகங்கள் செரித்து வீங்கிப்போயிருக்கின்றன. ஈரான் ஒரு மதஅடிப்படைவாத நாடு எனவும் சர்வாதிகார நாடு எனவும் நாகரிகத்தில் பின்தங்கிய நாடு எனவும் மேற்குலக ஊடகங்களால் கடந்த 47 வருடமாக வரையப்படுகிற சித்தரிப்புகளை மென்று விழுங்கி நம்மில் பலர் அவதிப்படுகிறோம். அதனடிப்படையில் ஈரானை புறநிலையில் நின்று புரிந்துகொள்கிறோம். விமர்சனங்களையும் அதனடிப்படையில் வைக்கிறோம்.

மையநீரோட்ட ஊடகங்களுக்கு வெளியே போய் மாற்று சிந்தனைமுறையை வளர்க்க நாம் முயலாதவரை எமது அறிவு உண்மையை கண்டுபிடித்துத் தராது.

Continue reading “ஈரானை விளங்கிக் கொள்ளல்!”

வெட்ட வெட்ட தழைத்தல் !

அமெரிக்காவும் இஸ்ரேலும் கனவு கண்டதைப்போல ஈரான் அரசாங்கத்தை விரைவாக கவிழ்த்து தமக்கு சார்பான அடிவருடி -ஷா இன் புத்திரனான- றேசா பாலவியை ஆட்சிக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைவர்களைக் கொல்வதன் மூலம் அல்லது உள்நாட்டு மக்களின் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களினுள் புகுந்து மடைமாற்றி அல்லது அதை செயற்கையாக உருவாக்கி ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்க நரித்தன வரலாறு ஈரானிடம் வந்து முட்டி மோதி நிற்கிறது. அதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புத்தான். உச்சத் தலைவரை மட்டுமல்ல இராணுவத் தளபதிகள் ஆலோசகர்கள் என சுமார் 50 பேருக்கு மேல் இதுவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொலைசெய்தபோதும் ஈரான் அரசை சரிக்க முடியவில்லை.

Continue reading “வெட்ட வெட்ட தழைத்தல் !”

அந்தோனி -திரைப்படம்

ஓர் இரசனைக் குறிப்பு

வழமையான தமிழ்த் திரைப்படங்கள் போல வெட்டுக் குத்தாக இருக்குமோ என்ற எண்ணம் “அந்தோனி” திரைப் படத்தைப் பார்க்கப் போகும்போது மனதில் எழாமலில்லை. அந்த எண்ணத்தை அந்தோனி தரைமட்டமாக்கியது. அசையா நிலையிலான தரைகளிலேயே வாழும் எம் போன்ற மனிதர்க்கு அசையும் நிலையிலான கடல் வாழ்வு அனுபவம் நாளாந்த வாழ்வாகக் கிடைப்பதில்லை. ஒரு சிறிய தீவான இலங்கையின் நான்கு கரையும் இருக்கும் கடல்வாழ்வைக் கொண்ட மனிதர்கள் பலர் இருப்பார்கள். அவர்களது அனுபவமும் கடல் போன்றதே. கடல் இயற்கையை அவர்கள் நேசிக்கிற விதம் அவர்களது வாழ்வாதாரத்தோடும் வாழ்வோடும் உணர்வுகளோடும் இழையாகப் பின்னிக் கிடக்கிறது என்பதை அதுசார்ந்த திரைப்படங்களைப் பார்க்கிறபோது உணர வைக்கும்.

Continue reading “அந்தோனி -திரைப்படம்”

வெட்கம்!

16 வயதான அல்லைப்பிட்டி சிறுவன் சென்ற மாதம் பொலிசாரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டான். அந்தச் சிறுவன் ஊடகங்களாலும் தனிமனிதர்களாலும் கள்ளன், ஒழுக்கமற்றவன், படிக்காதவன்… அது இது என செய்யப்படும் அவதூறுகள் ஒரு மனித உயிரியின் உயிரைப் பறிக்க நியாயம் வழங்குவதானது ஒரு சிந்தனைக் கொடுமை. அவன் அப்படி இருந்தானா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. அது கதையாடலாகக்கூட இருக்கலாம். சட்டத்தை மீறினானா என்பதை தீர்மானிக்க நீதிமன்றம் என்ற அமைப்புமுறை இருக்கிறது. சரியாகவோ பிழையாகவோ அமையும் தீர்ப்புகளை அது கொண்டிருக்கலாம் என்றபோதும், இந்த அமைப்புமுறையை நிராகரிக்க முடியாது. ஆனால் தீர்ப்புச் சொல்ல அல்லது தண்டனை வழங்க எந்த மக்களுக்கும் உரிமை கிடையாது.

Continue reading “வெட்கம்!”

‘வெள்ளை’ நெஸ்லே

நெஸ்லே (Nestle) நிறுவனம் மீது சுவிஸ் Public Eye அமைப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. “நெஸ்லேயின் இந் நடவடிக்கையானது நீண்ட வரலாறு கொண்ட காலனியம், சுரண்டல் மற்றும் நிறவாதத்தை வெளிப்படுத்துகிறது. நெஸ்லே வேண்டுமென்றே ஆபிரிக்காவில் உடற் பருமனையும், மிகை-இனிப்பு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் சீனியூற்றி வளர்க்கிறது” என தென் ஆபிரிக்கCape Town பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லோறி லேக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Continue reading “‘வெள்ளை’ நெஸ்லே”

சமாதானத்துக்கான நோபல் பரிசு

2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார்.

Continue reading “சமாதானத்துக்கான நோபல் பரிசு”

Flotilla அலை

இஸ்ரேலின் கோர முகமும் மனித இழிவுச் செயல்களும் புளோற்ரீலா போராட்டக்காரர்களை அச்சமூட்டி அனுப்பிவைத்திருக்கின்றன. கடந்த புதன் கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை புளொற்ரீலா வள்ளங்கள் முழுவதும் இஸ்ரேல் கடற்படையால் கட்டம் கட்டமாக முற்றுகையிடப்பட்டு, அவற்றில் பயணம் செய்த 437 செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த அமளிக்குள்ளும் 3 கப்பல்கள் தமது சமிக்ஞைகளை மாற்றி மாற்றி முயற்சிசெய்து பயணித்தும்கூட அவை காஸா கடற்கரையிலிருந்து 130 மைல் தூரத்தை மட்டுமே எட்டித் தொட முடிந்தது.

Continue reading “Flotilla அலை”

இதுதான் டிசைன்

Thanks for image: time .com

பலஸ்தீன காஸா பகுதியில் போரை நிறுத்தி இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க ட்றம்ப் அரசினால் வரையப்பட்ட சமாதானத் தீர்வு பற்றிய பேச்சு இப்போ பேசுபொருளாகியுள்ளது. இந்தக் கூற்றில் இரண்டு கதையாடல்கள் இருக்கின்றன. ஒன்று காஸாவில் நடப்பது ‘போர்’ என்றதான கதையாடல். அங்கு நடப்பது போரல்ல. ஓர் இனப்படுகொலை என்பதே உண்மை. மற்றைய கதையாடல், இஸ்ரேலுக்கு கமாஸ் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பது என்பது.

Continue reading “இதுதான் டிசைன்”

காஸாவின் குழந்தைகள்

The Guardian பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான Rhiannon Lucy Cosslett அவர்கள் 24.05.2025 எழுதிய பத்தியின் மொழிபெயர்ப்பு இது.

Thanks: Aljazeera

கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வார்த்தைகளில் சொல்ல முடியாத பயங்கரத்தையும் வன்முறையையும் காவிவரும் இக் காட்சிகள் என்னை சிதைக்கின்றன. சிலவேளைகளில் காணச் சகிக்காமல் படங்களையும் காணொளிகளையும் எனது விரல்கள் கைபேசித் திரையில் வழுக்கிச் செல்ல வைக்கிறது. அடுத்த காட்சியாக எதையெதைப் பார்க்க நேரிடலாம் என்ற அச்சம் எழுகிறது. பெரும்பாலும் இவற்றை சகித்துக் கொள்ள நான் நிர்ப்பந்திக்கப் படுவதாக உணர்கிறேன்.

Continue reading “காஸாவின் குழந்தைகள்”