Archive for October 2011
மசிருரிமை
Posted October 25, 2011
on:- In: கவிதை
- Leave a Comment
அடித்துக் கொல்வது
அறுத்துக் கொல்வது
ஆண்குறியால் கொல்வது
கோடரியால் வெட்டிக் கொல்வது
பிணத்தைச் சுற்றி ஆர்ப்பரிப்பது… எல்லாமுமே
ஒரு நிகழ்தகவாய்
ஒரு வாழைப்பழ ஜீரணிப்பாய்
குரூரப்படும் காலங்களுடன்
கைகோர்த்துச் செல்கிறது
காட்டுமிராண்டிக் காலம்.
மனித உரிமை மசிருரிமையாய்
தூசித்து விழுகிறது.
– ரவி (25102011)
- In: கவிதை
- Leave a Comment
இறுகிய பனிமலைகள்
பிளந்து விழுகிறது துருவத்தில்.
சூடேறிக்கொண்டிருக்கும் பூமிபற்றி
கவலைகொள்கின்றனர் மனிதர்கள்.
ஓவியர்களின் தூரிகைகள்
எதிர்காலத்தை எட்டுகின்றன.