வெற்றிகொள்ள முடியாதா என்ன!

முகநூலில் நடந்த சாதிய கதையாடல்களை முன்வைத்து…

பகுதி-1

இந்த உலகம் ஓர் இனவாத உலகம். இனவாதம் தொன்றுதொட்டு வெவ்வேறு வடிவங்களில் நிலவிவருகிறது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை நிறவெறி வடிவிலான அமெரிக்க இனவாதத்தினதும், மறுதலையாக அந்த இனவாதத்துக்கு எதிரான மக்கள் மனநிலையினதும் ஓர் குறியீடு. அது அதிர்வலையை மட்டுமல்ல, பல கேள்விகளையும் எமது சிந்தனையில் எழுப்பியிருக்கிறது. அடிமை வாழ்வின் இழிவுபடுத்தல்களோடும், தனித்துவமான ஆபிரிக்கப் பண்பாடுகளின் அழிப்புகளோடும், வெள்ளை மேலாதிக்கத்தோடும் இயங்கிய இனவாத காலகட்டமானது கறுப்பின மக்களை மனிதப்பிறவிபோல நடத்தாத ஓர் வரலாற்று குரூரம் வாய்ந்தது. இந்த மனநிலையுடன் கறுப்பின மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு அமெரிக்காவினுள் கொண்டுவரப்பட்டார்கள். சுமார் நூற்றியைம்பது வருடங்களின் முன்னர் மிகமிகச் சிறிதான வெள்ளையர்கள் மட்டுமே -அதுவும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தை தமது ஆத்மாவில் ஏற்றுக்கொண்ட வெள்ளையர்களே- மனிதாபிமான அடிப்படையில் அடிமை முறைமையை தமது வலுவுக்குள் நின்று எதிர்த்தார்கள். கறுப்பின அடிமை வாழ்விலிருந்து உதிரிகளாக தப்பியோடிய கறுப்பின மக்களை கனடாவுக்குள் எல்லை கடந்து செல்ல உதவினார்கள். பொதுப்புத்தி என்பது முற்றாகவே வெள்ளை மேலாதிக்க கருத்தியலோடும் கற்பிதங்களோடும் வெள்ளையின சமூகத்தை இயக்கியது.

Continue reading “வெற்றிகொள்ள முடியாதா என்ன!”