வருக 2004 !

இன்னொரு புதுவருட வரவும்
நிகழ்த்தப்பட்டாயிற்று
உடல்நல உளநல விசாரிப்புகள்
மட்டுமன்றி
சமாதானம் அமைதி என்றெல்லாம்
வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டுமாயிற்று.

Continue reading “வருக 2004 !”

ஊரோவியம்

ஒரு கனவாவது கண்டுவிடவேண்டும்
என்
சிறுபருவ நாளொன்றை.
நாளும் பொழுதுமாய் அன்று நான்
இளந் து£ரிகை கொண்டு
வரைந்த
எம்ஊர்ச் சித்திரத்தை
இப்போதைய என் ஊர்சுற்றலாலும்
அழிக்கமுடியவில்லை.
பதினெட்டு ஆண்டுகளை
பனித்தேசத்தில் படரவிட்டு இப்போ
படர்ந்தும்போனேன்தான்.
ஆனாலும் எனது ஊர்
என்னிடம் ஓவியமானது.

Continue reading “ஊரோவியம்”