Archive for March 2009
- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
[30-Mar-2009]
“யாழ்ப்பாணத்திலை உங்கடை சனத்துக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கிறன். நான் வித்தியாசமானவன். நான் சந்திரிகா போலை இல்லை…” இது வீதிச்சண்டியன் ஒருவனின் வாக்குமூலமல்ல. சபிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியின் குரல். “நான்தான் உன்ரை செக்குரிற்றியை வாபஸ் பெற்றனான். உன்ரை இடத்துக்கு உனக்குப் பாதுகாப்புத்தர ஒருத்தரும் வரமாட்டாங்கள். போய் பிரபாகரனிட்டை கேள் உனது பாதுகாப்பை. காட்டுச் சட்டங்களைப் புகழ்ந்துகொண்டிருக்கிறவையள் உங்கடை ஆக்கள்…” நாட்டுச் சட்டங்களை கையில்வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் உரையாடல் இது.
அரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்
Posted March 16, 2009
on:- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
[16-Mar-2009]
இலங்கையின் அரசியல் இன்னொரு சுற்றில் வந்திருக்கிறது. ஆயுதத்தைத் தூக்கிய கைகள் கும்பிடு போட்டு பெருந்தேசியக் கட்சியில் காட்சியளிப்பதுதான் அது. இனவாதம் என்பது பெருந்தேசிய இனத்தால் சிறுபான்மை மக்களின்மேல் பிரயோகிக்கப்படுவது மட்டுமல்ல.சிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.