வாழைமரக் கதை

“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன? ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.

Continue reading “வாழைமரக் கதை”

The struggle is my life – நெல்சன் மண்டேலா

சிறைக் கொடுமையிலிருந்து வெளிவருதில் தமது தனிப்பட்ட வாழ்வை அல்லது தமது இருப்புகளை முதன்மைப்படுத்தி செயற்படும் மனித வாழ்வியல் விருப்பை மண்டேலா எடுத்துக்கொண்டவரல்ல. போராளியாகவே உள்ளே போனார். போராளியாகவே வெளியே வந்தார், அதுவும் நிபந்தனைகள் எதுவுமற்று. போராட்ட வாழ்வில் தம்மை நம்பி வந்த மக்கள் இழந்தவைகளுக்கு அவர் இவ்வாறுதான் பொறுப்பெடுத்தார். பதிலளித்தார். அவர் உண்மைப் போராளியாய் நிமிர்ந்தது இவ்வாறுதான்.

nelson mandela-95.

Continue reading “The struggle is my life – நெல்சன் மண்டேலா”