சிவகாமி அவர்களின் உரையாடல் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. தேவையானதும்கூட. அதே நேரம் அவரின் அந்த உரையாடல் காணொளிக்கு வந்திருக்கும் சில பின்னூட்டங்கள் பல அருவருப்பூட்டுபவையாக உள்ளன என்பதை கண்டுகொள்ளாமல் விடமுடியாது. அந்தவகைப் பின்னூட்டங்கள், நிலைத் தகவல்கள் தமிழ்த் தேசிய வெறியர்களினதும் ஒழுக்கவாதிகளினதும் “மனவளத்தை” வெளிப்படுத்துகின்றன.
Month: September 2013
சித்திரம் பேசுதடி..!
இலங்கை அரசியல் மனநிலையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தமிழின உணர்வாளர்கள் மட்டுமல்ல, தமிழக புத்திஜீவிகளும் எந்தளவு புரிந்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வரும் கேள்வியாக உள்ளது. புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரதேசங்களில் நிழல் ஆட்சி புரிந்தபோது, ஆகா ஓகோ என உணர்வாளர்கள் (திரைப்பட இயக்குநர்கள், ஓவியர்கள், புத்திசீவிகள் என) தமிழகத்திலிருந்து படையெடுத்தவர்கள் அந்த நிழல் ஆட்சி பற்றி சித்திரம் வரைந்து பெருமிதப்பட்டனர். மக்கள் தரப்பிலிருந்து எதையும் கண்டுகொள்ளத் தவறினர்.
“செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி
இரட்டைக்கோபுரத்தாக்குதல் மீதான மதிப்பீடுகள் வெறுமனே, கொல்லப்பட்ட அப்பாவி மக்களோடு அல்லது பௌதீக அழிவுகளோடு அல்லது தீமை என்ற கருத்தியலோடு மட்டுப்பெற முடியாதவை. அது ஒரு குறியீட்டின் மீதான தாக்குதல். அதாவது உலக அதிகார ஒழுங்கின் மீதான, கேள்விகேட்கப்பட முடியாத அதிகார மையத்தின் மீதான -ஓர் எதிர்ப் பயங்கரவாத- தாக்குதல். அதனாலேயே உலக அதிகார சக்திகள் பதறிப் போயின. அந்த அதிர்வுகள் இன்னமும் அமைதியுறவில்லை.
Continue reading ““செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி”
நிழல் Hero ?!
கிட்லரின் „மைன் காம்ப்“ புத்தகம் அரசியலாளர்களால் நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல் என நினைக்கிறேன். தேசியம் பற்றிய ஆபத்தான பக்கங்களை புரிந்துகொள்ள அதுவும் ஒரு விதத்தில் பங்களிக்கிறது. பிரபாகரன் அரசியல் ரீதியிலோ அல்லது இராணுவ ரீதியிலோ கிட்லரால் ஆகர்சிக்கப்பட்டாரா அல்லது அவரை அதிலுள்ள கருத்துகள், அணுகுமுறைகள் பாதித்தனவா என்பதெல்லாம் முன்னாள் புலி உதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை.அதேநேரம் அந்தக் கூற்றின் சாத்தியங்களையும் மறுத்துவிட முடியாது.