நினைவழியா வடுக்கள்

சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்

ninaivazhiyaa-vadukkal-10013330-550x550h
சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.

Continue reading “நினைவழியா வடுக்கள்”

இனி கடுப்பேத்த முடியாது!

கலைஞன் சண்முகராஜாவுடனான சந்திப்பு – சுவிஸ்

பாடசாலை மாணவனாக இருக்கும்போது இரவில் ரியூசன் முடிந்து சைக்கிளில் டபிள் வருகிறோம், நானும் நண்பனும்! பொலிஸ் மறிக்கிறது. கன்னத்தில் பலமாக அறைந்தான் ஒரு பொலிஸ். எனது தலைக்குள் வெள்ளிகள் தோன்றி மறைந்தன. நான் மண்ணுக்கு திரும்பி வந்தபோது நண்பனை சைக்கிள் ரியுப் இனுள்ளிருந்து காற்றை திறந்துவிட பணித்திருந்தான் மற்ற பொலிஸ்.

அன்று தொடங்கிய பொலிஸ் மீதான வெறுப்பானது இயக்க போராளிகளை தேடுதல் வேட்டை, கைது சித்திரவதை, விசாரணை, உளவுபார்த்தல் என பொலிஸ் களமிறங்கியபோது பன்மடங்கு கடுப்பாக்கிவிட்டிருந்தது. தவறுசெய்யாமலே பயப்பட வேண்டி வைத்த காக்கிச் சட்டை அரச வன்முறை இயந்திரத்தின் குறியீடாய், தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்றாய், வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறிவிட்டிருந்தது. இப்போதும் சினிமாவில் காக்கிச் சட்டையைக் கண்டால் எனக்குள்ளிருந்து ‘ஒருவன்’ சிலிர்த்தெழுந்துவிடுவான்.

Continue reading “இனி கடுப்பேத்த முடியாது!”

காந்தி

பெரியார் போலவே காந்தியும் மேலோட்டமாகவே எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அம்பேத்கார், பெரியார் போலவே காந்தியும் எனக்குப் பிடித்த தலைவர்களில் ஒருவர். வாழ்வு என்பது செயல்களால் மட்டுமல்ல செயல் மறுப்புகளாலும் அமைவது என நிகழ்த்திக் காட்டியவர் காந்தி என்பதால் போராட்டக் குணம்கொண்டவர்கள் காந்தியை வெற்றுச்சொற்களால் கடந்து செல்ல முடியாது. வலிமையான மைய அரசைவிட தன்னிறைவான கிராமங்களை உருவாக்குவது பற்றி பேசிய காந்தி எனக்கு முக்கியமானவர்.திணிக்கப்பட்ட ஒழுங்குகள் அச்சம் உள்ளவரைதான் நிலைக்கும் என்ற காந்தி முக்கியமானவர். நாம் கீழானவர்களாக உணராதபோது ஆள்பவர்கள் நமக்கு மேலானவர்களாக தம்மை உணர முடியாது என்ற நுண்ணரசியலை வெளிப்படுத்திய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். தமக்குள் விடுதலை அறத்தை கொண்டிராத தனிமனிதர்களும் சமூகமும் அரசியல் விடுதலையின் வழியாக எதனையும் பெற்றுவிட முடியாது என்பதை வௌ;வேறு வடிவங்களில் விளக்கிக் காட்டிய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். காந்தியத்தை கோட்பாட்டுப் புரிதலுக்கு உட்படுத்தி அதை ஏற்கவும், எதிர்க்கவும், கட்டவிழ்க்கவும் முடியாத அறிவுச் சோம்பேறித்தனத்திற்கு ஒப்பீட்டுப் பதிவுகள் ஒரு கேடு. பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம்” நூலை இவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

வெறுமை

நிலாவொளியை இரகசியமாய் முத்தமிட்டு

கிறங்கிப் போய்விடுகின்ற

கடல் அலைகளின் கள்ள அசைவுபோல்

அவளின் தோல் சுருக்கங்களுக்கு இடையே

வாழ்ந்துபட்ட அனுபவம் துலங்கிக்கொண்டிருந்தது.

தன்னைத் தாங்குவதில் மூன்றாவது காலாய்

ஒரு கைத்தடியைத் தன்னும் அவள் மறுத்திருந்தாள்.

அனுபவத்தின் பாரம் அவளை

மெல்ல நடந்துகொள்ள அனுமதித்தது.

காணும்போதெல்லாம்,

ஒரு புன்னகையை அவள் சிந்தியபடி

எனை எதிர்கொள்வாள்.

எனது கைமணிக்கட்டை பிடித்து பேச தொடங்குவாள்.

எனது அவசரம் மணிக்கட்டின் பிடியை கடிந்துகொள்வதால்

செல்லுபடியாகிற ஒரு காரணத்தோடு

ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்வேன்.

என்றாவது ஒருநாள்

அவளுடன் ஆறஅமர இருந்து பேச வேண்டும்.

அவள் காட்டுகிற இன்னொரு உலகத்தை தரிசித்துவிட வேண்டும் என்ற

கனவு எனது அறிவின்மையால் கலைந்து போனது.

அவள் தனியாக வாழ்ந்து கழித்த அறை

வெறுமையாய்க் கிடந்தது.