Archive for May 2003
வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
Posted May 30, 2003
on:- In: அறிமுகம் | இதழியல்
- Leave a Comment
– ஓர் அறிமுகக் குறிப்பு
நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடும் கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
…..
பழசின் புதுசு
Posted May 11, 2003
on:- In: கவிதை
- Leave a Comment
தீயின் செந்நாக்கை நான்
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது
கடத்திவரப்பட்டேன்.
இருபத்தியிரண்டு ஆண்டுகள்
புத்தகங்களின் சாம்பலால்
தூசிப்படுத்தப்பட்டதாய் எம் அறிஞர்களும்
அலுக்காது சொல்லிக்கொண்டிருந்தனர்.
எரிபாடுகளின் குவியலில் எஞ்சிய
நூல்களும் களவாடப்பட்டிருந்தன.
போரறிந்த சமாதானம்
Posted May 8, 2003
on:- In: கவிதை
- Leave a Comment
போர் கவிழ்ந்த எமது தேசத்தில்
தளபதிகள் உருவாயினர்
தத்துவவாதிகள் தோன்ற மறந்தனர் அல்லது
மறுக்கப்பட்டனர்.
வரலாற்றை
போராட்டம் நகர்த்திச் சென்றது
ஆனாலும் நாம்
அனுபவங்களும் சிந்தனைகளும்
சேர்ந்து நடக்க
தடைவிதித்தோம்.
பொழுதைத் தோய்த்தல்
Posted May 5, 2003
on:- In: டயரி
- Leave a Comment
நான் அநேகமாக நித்திரையாகிக் கொண்டிருந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்த சிறுகதைத் தொகுப்பின் நான்காவது கதையை நான் வாசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கையிலிருந்து புத்தகம் நழுவி தலையணையில் மெல்ல சாய்ந்துகொண்டது. அதன் போதையை நான் சுகித்திருக்க வேண்டும். கையில் புத்தகங்களை எடுத்தாலே இடையில் ஓர்; பக்கம் திறந்திருக்க நான் தூங்கிப் போய்விடுவதுண்டு. எழுத்து என்னில் ஊறுவதும் எழுத்தாளனிடமிருந்து நான் விடைபெற்று அதை நகர்த்தபவனுமாய்ப் போவேன். பின்னர் தூங்கிப் போய்விடுவேன்.
“கொரில்லா” – உள்ளும் புறமும்…
Posted May 5, 2003
on:- In: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
– ஒரு குறிப்பு-
ஷோபாசக்தியின் கொரில்லா நாவலிற்கான அடையாளத்தினை சாதிக் கொடுக்கும்போது இந்த எதிர்பார்ப்பை தந்து நாவலுக்குள் அனுப்புகிறார்.
ஊத்தையர்களோடு ஊத்தையர்களாக… விளிம்புநிலை வாழ்வை வரித்துக் கொண்ட… என்றெல்லாம் அடையாளம் ஷோபாசக்தியை அறிமுகம் செய்கிறது. பொருளாதார ரீதியிலும் வசதிவாய்ப்புகளிலும் ஏன் வேலை இல்லாதவனுக்கும் சமூகநலன் உதவியும் சமூக உத்தரவாதமும் இருக்கும் ஒரு நாட்டில் ஊத்தையனாக இருந்து தன்னை விளிம்புநிலை மனிதனாக காட்டவேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.
யுத்தவாசம்
Posted May 4, 2003
on:- In: கவிதை
- Leave a Comment
யுத்தம்
தொலைக்காட்சிகளின் பிரமாண்டங்கள்
வெடிகுண்டுகளின் பேரோசை
புகைமண்டலங்கள் காற்றை விழுங்கி ஏப்பமிட
அதிர்வுகளில் ஈடாடியது
ஈராக் பூமி