சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் கல்பிட்டி பிரதேச எல்லைக்குள் ஒருபுறம் பாக்குநீரிணையையும் மறுபுறம் “டச் வளைகுடா”வையும் கொண்டுள்ள 14 சிறிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. அதில் 25 ஹெக்ரர் பரப்பளவைக் கொண்ட இரண்டாவது பெரிய தீவு உச்சிமுனை என்று அழைக்கப்படுகிறது. இதை சுவிஸ் இனை தளமாகக் கொண்ட சுற்றுலா கம்பனியொன்று (Let’s Travel) 30 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. மாலைதீவின் மாதிரி வடிவில் 150 நீர்சூழ் பங்களாக்கள் முளைக்கும் சுற்றுலா விடுதி தோன்ற இருக்கிறது. “சுற்றுச்சூழலை காதலிக்கும் விடுதி” என்ற பெயர்ப்பலகையோடு இத் திட்டம் உருவாகிறது.

Continue reading “சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !”

மாயை ஆகுமா ?

image: slguardian.org

காலிமுகத்திடல் போராட்டத்தில் ராஜபக்சக்களை அகலுமாறு கேட்டு போராடியது எவரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்காதளவு வெற்றியளித்திருக்கிறது. ஒரு அரண்மனை ஆட்சி வீழ்ந்துகொண்டிருப்பது போல அதை விழிபிதுங்க பார்த்தார்கள் மக்கள். போரை வெற்றிகொண்ட ஒரு மன்னராக கொண்டாடப்பட்ட மகிந்தவின் வரலாறு மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றளவுக்கு சென்றிருந்தது. இன்று அந்த மன்னன் குறித்த பிம்பத்தை இந்தப் போராட்டம் தகர்த்ததோடு அவரை ஓடிஒளிந்துகொள்ளவும் வைத்திருக்கிறது. இது மிகப் பெரும் சாதனை. மக்கள் போராட்டத்தின் வலுவை உணர்த்திய சம்பவம்.

Continue reading “மாயை ஆகுமா ?”