Archive for January 2015
ஸைமா அல்-ஸாபா.
செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.
எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் குண்டுகள் அறியுமா கவிவாசனை. 2011 ஜனவரி 25 இல் தொடங்கிய தாகீர் சதுக்க எழுச்சியின் 4 வருட நினைவை தாங்கி மலர்வளையங்களுடன் அமைதியாய் ஊர்வலமாகச் சென்ற சோசலிசவழிச் செயற்பாட்டாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஓடமறுத்தவர்களில் அவளும் ஒருத்தியாக தாகீர் சதுக்கத்துக்கு அருகே நடைபாதையில் அவள் நடந்துகொண்டிருந்தாள். மிக அருகில் வைத்து அவள் சுடப்பட்டு இறந்துபோனாள்.
ஒரு நினைவுக் குறிப்பு .
Posted January 21, 2015
on:இயக்கம் கற்றுத்தந்த பாடம் என்றெல்லாம் உருப்படியாக எதுவும் தொடர்ந்துதோ இல்லையோ, அவை கற்றுக்கொடுத்த மலினப்பட்ட சந்தேக மனநிலை அவ்வப்போது முளைத்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது- ஒரு நோய்க்கூறுடன்.
- In: பதிவு | விமர்சனம்
- 3 Comments
மறுப்பைப் பதிவு செய்தல் !
(குறிப்பு: வாசகர்களே ! இவ்வாறான ஒரு பத்தியை எழுத வேண்டி ஏற்பட்டது பிரயோசனமானதுதானா என எனக்குத் தெரியாது. இன்றைய முகநூல் போன்ற பொதுவெளியின் தன்மையை கவனத்தில் எடுத்து -2005 க்குப் பின்- திரும்பவும் ஒருமுறை இந்த மறுப்பை பதிவுசெய்ய வேண்டி ஏற்பட்டிருக்கிறது.)
சனநாயக்தின் காவலர்களில் ஒருவரான அசோக் அவர்கள் சபாலிங்கத்தின் படுகொலையில் சுவிஸ் மனிதம் குழுவினரை நோக்கி வந்திருக்கிறார். தனது முகநூலில் இதுபற்றிய முனகலுடன் தொடங்கிய குரல் நகர்ந்து வந்து மனிதம் குழுவிடம் வந்து, இறுதியில் எனது படலைக்கு வந்துசேர்ந்திருக்கிறது. உண்மைகளை கண்டறிவதிலுள்ள தீராத வேட்கையில் அசோக் இருக்கிறார். “எனக்கொரு உண்மை தெரிந்தாகணும்“ என்று அவர் கொடுத்துக்கொண்டிருக்கும் வெளிக்குரல் முகநூலில் வருகிறபோது பலருக்கும் சந்தேகங்களை எழுப்பிவிடக்கூடியதாக தேர்ந்த சொற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குரல் தனிநபர் விருப்பு வெறுப்புச் சார்ந்தது. வஞ்சனை மிக்கது.