அவள் வருவதாயில்லை

வண்ணத்துப்பூச்சிகள் நிறங்களையெல்லாம்
உதிர்த்துக் கொட்டிய பேய்ச்சோகம்
அவள் முகத்தை சருகிட்டிருந்தது
அப்படியான ஒரு பொழுதில்
மீண்டும் அவளை நான்
சந்தித்தேன் திட்டமிட்டபடி.

Continue reading “அவள் வருவதாயில்லை”

வாழ்தல் என்பது…

எனது கண் இறைக்கும் ஒளியை
ஓர் புள்ளியில் தேக்க
எனக்கு இஸ்டமில்லை.
அது படர்வதற்குரியது.

விரும்பியபோது விரும்பிய இடத்தில்
ஆடவும் பாடவும்
அதிகளவு சுதந்திரம் அனுபவிக்கிறது
ஒரு குழந்தை –
என்னைவிட.
அழுதலுக்காக இரங்க ஆயிரம் மனிதர்கள்.
தனிமையாய்
மனம்விட்டு சிரிக்கும் எனை
பைத்தியமென பார்வையெறிந்து
கொல்லும் உலகில்
சேர்ந்து சிரிக்க நான் மனிதர்களைத் தேடுகிறேன்.

Continue reading “வாழ்தல் என்பது…”

முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்

காற்றுக்கூட உறங்க
நினைக்கும் இரவின் அமைதி
நிச்சயமற்றுப்போன ஓர்
இரவில் இது நடந்திருக்கலாம்
அல்லது,
சூரியனின் ஒவ்வொரு கதிர்களையும்
முறித்துப்போடும் வெறியோடு
செல்களும் குண்டுகளும்
படைநடத்திச் சென்ற ஒரு
பகல்பொழுதிலும் இது நடந்திருக்கலாம்

Continue reading “முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்”