சான்ரீஸ்!
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்
கூந்தலாய் முகில் விரித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.
சான்ரீஸ்!
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்
கூந்தலாய் முகில் விரித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.
நீர்த்திவலையால்
மேகத்தை அழைத்து
வானத்தை தன்
மடியில் வீழ்த்தியிருந்தது
அந்த அருவி
வானம் கிறங்கிக் கிடந்தது
அருவியின் அணைப்பில்.
மரங்களின் பச்சையம்
வழிந்து
கரை ஊறிக்கிடந்தது.