நாவல்தானே ஓர் ஓட்டமும் நடையுமாக கடைசிப் பக்கத்தை எட்டிப் பிடித்துவிடலாம் என்ற எனது எதிர்பார்ப்பைப் பார்த்து ஓரான் பாமுக் புன்னகைத்திருத்தல் கூடும். ஒருவேளை அதற்கும் ஒரு படிமத்தையும் பனிச் செதிலிலிருந்து உருவி எடுத்துக் காட்டியுமிருப்பார் அந்த மனுசன். பனியை எத்தனைவகையான குறியீடாக, படிமமாக பொரித்துக் காட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.