சகோதரியே
நீ
வெடிகுண்டை உன் உடலின்
பாகமாக்கிய கணத்திலேயே
இந்த மண்ணிலிருந்து உனது வேர்கள்
அறுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை
உணர்ந்திருப்பாய்.
மனித அறிதலுக்கு உட்படாத உன்
உணர்வுகளை நீ
யுகங்களை விழுங்கி அவஸ்தைப்பட்டதை
புயலின் முன்னரான மேகக்கூட்டங்கள்
பேயோட்டமாய் காவிச்சென்றதடி.