புகலிட இலக்கிய யதார்த்தம்

மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலித்தோம்.

Continue reading “புகலிட இலக்கிய யதார்த்தம்”

கொரோனாவும் சீனாவும்

  • டானியல் கன்ஸர்
Dr.Daniele Ganser, Historiker, Philosophie, Publizist

சுவிசின் அறியப்பட்ட வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் 5 பெப்பரவரி இல் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று கொரோனா குறித்தான மிக முக்கியமான ஆய்வாக வந்திருக்கிறது. அந்த ஒன்றே முக்கால் மணி நேரக் காணொளியில் சொல்லப்பட்ட விடயங்களின் சுருக்கத்தை இங்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

Continue reading “கொரோனாவும் சீனாவும்”

P2P

பொத்துவில்லிலிருந்து பொலிகண்டிவரை! – அடையாள நடைப்பயணம்.

image : tgte-homeland.org

அரசியலில் சாத்தியப்பாடுகள் குறித்தே பேசமுடியும். பெரும்பா1லும் வெளித்தெரிகிற சாத்தியப்பாடுகளையே பொதுப்புத்தி முன்வைத்து வியாக்கியானம் செய்யும். வெளித்தெரியாமல் இயங்கும் நுண்ணரசியல் பற்றி புரிவது அவளவு இலகுவல்ல. ஆனால் இந்த நுண்ணரசியலின் உணர்வுதான் சமூக இயங்குதளத்தை நிர்மாணிக்கிறது. அது பொதுப்புத்தியின் வழி செயலூக்கம் பெறுகிறது.

Continue reading “P2P”