சப்ளினின் உலகம்

DSC00286
சுமார் 20 வருடங்களுக்கு முன் எஸ்.வி ராஜதுரை சுவிசுக்கு வந்திருந்தபோது சார்ளி சப்ளின் வாழ்ந்த வீட்டை நோக்கிய (300 கி.மீ) பயணத்தை மேற்கொண்டோம். அந்த வீடு மிக உயரமான மதிலுக்கு பின்னால் மறைந்திருந்தது. பெரும் மரங்கள் ஏதோவொன்றை பொத்திவைத்திருப்பது மட்டுமே தெரிந்தது. உள்ளே போக முடியாது. எதையும் பார்க்க முடியாது. வீடாகவே அது இருந்தது. எஸ்விஆருக்கு அது பொருட்டாக இல்லை. சார்ளி சப்ளின் நடந்த இந்த வீதியில் நானும் நடக்கவேணும் என்றபடி அங்குமிங்குமாக ஒருவித ஆகர்சிப்புடன் நடந்தார். அதை இப்போ அவர் பார்க்க நேர்ந்தால் ஒருவேளை சப்ளின் வாழ்ந்த அந்த வளவினுள் உருண்டுபுரளவும் கூடும்.
இருபதாம் நூற்றாண்டின் இந்த மாபெரும் மக்கள் கலைஞன் நம்மில் பலரையும் இவ்வாறேஆதர்சித்து நிற்கிறான்.

Continue reading “சப்ளினின் உலகம்”