Archive for July 2019
- In: நினைவு | பதிவு
- Leave a Comment
30.7.2012 விடியல் சிவா காலமாகி இப்போ ஏழு ஆண்டுகளாகிவிட்டிருக்கிறது. சில இழப்புகள் ஏற்படுத்திச் செல்லுகிற நினைவு இறக்கிவைக்க முடியாதவை. பிரக்ஞைபூர்வமாக தனது வாழ்வை வாழ்ந்து காட்டிய விடியல் சிவாவின் நினைவும் அத்தகையது. நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.
அவரது மரணத்துக்கு சில தினங்களின் முன் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய் அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
மணல் யுத்தம் (Sand war)
Posted July 28, 2019
on:- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
இந்த பத்தியை கணனியில் நான் எழுதிக்கொள்ள பாவிக்கும் ‘எழுத்தடங்கி’ (keyboard) மட்டுமல்ல, கணனித் திரை… ஏன் கணனியின் உடலழகுகூட மணல் இன்றி உருவாகியிருக்க சாத்தியமில்லை. பாவிக்கும் கைபேசிகள், தொலைக்காட்சிகள், அதன் சிம் கார்ட்டுகள், சிப்ஸ்கள் மட்டுமல்ல, பற்பசை மற்றும் அழகுசாதனங்கள்கூட மணலின்றி சாத்தியமில்லை. அந்தளவுக்கு வாழ்வோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது மணல்.
இருந்தும் நம்மில் பலராலும் கண்டுகொள்ளப்படாமல் நடக்கும் யுத்தம் மணல் யுத்தம் (sand war).
கூச்சல்
Posted July 24, 2019
on:ஒருமுறை வேலைநிமிர்த்தம் இங்கு (சுவிஸ்) வந்த பெங்களூர் நண்பர் ஒருவர் தமிழீழத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்துவிட்டிருந்தால் இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா..“ என அங்கலாய்த்தார். அவரிடம் நான் சொன்ன பதில், “அப்பிடியொரு நிலை வந்தால் இந்திய மாநிலமாக இருப்பதைவிட நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்காக போராட வேண்டி ஏற்படும்.“ என.
Read the rest of this entry »
யூலைக்கால நினைவுக் குறிப்பு
Posted July 24, 2019
on:- In: டயரி | நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
1983 யூலை கடைசிப் பகுதி. இரத்மலானை விமான நிலையம் அகதிமுகாமாக உருமாறியிருந்தது. ஆயிரக்கணக்கான அகதிகள். குழந்தைமையிலிருந்து கிழம்வரை பருவமுற்றிருந்தனர் அவர்கள். நாம் 55 பேரும் ஓரிடத்தில் குழவாகியிருந்தோம். படுக்கை, இருப்பு எல்லாம் அந்த இடத்துண்டை எமது பிரதேசமாக ஆக்கியிருந்தது. அனைவரும் மொரட்டுவ பல்கலைக் கழகத்திலிருந்து பத்திரமாக கொண்டுவரப்பட்டிருந்தோம். எம்மாலான உதவிப் பணிகளில் நாம் அநேகமாக ஓய்வற்றிருந்தோம். ஒரு கண்டத்தை கடந்து வந்ததான நினைப்பு எல்லாக் களைப்பையும் வெற்றிகொண்டது.
“ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்”
Posted July 12, 2019
on:- In: இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
ஐயர் (கணேசன்) இன் நூல்
– தாமதமான வாசிப்பு
1985 ஆரம்பகாலப் பகுதி. கருக்கல் பொழுது. எமது ஊர் அதிகாலை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. செய்தி ஒரு உட்புயலாக ஊருக்குள் வேகமாக பரவுகிறது. முதலில் வாசிகசாலை மையத்துக்கு ஓடுகிறேன். அங்கு மற்றைய நண்பர்கள் பரபரப்புடன் நிற்கிறார்கள். எல்லோருமாக சுற்றிவளைப்பின் கெடுபிடியை கடப்பு ஒன்றினூடான பதுங்கிக் கடந்து அயல் ஊருக்குள் ஓடிக்கொண்டிருந்தோம். பயிற்சி எடுத்தவன் எடுக்காதவன் ஆதரவாளன் என அந்த இளைஞர் குழாம் பல இயக்க வாடையை காவியபடி பறந்துகொண்டிருந்தது. கையில் ஒரு பிஸ்ரலுடன் ரெலோ இயக்க போராளி ஒருவன் எம்முடன் ஓடிக்கொண்டிருந்தான். “என்னடாப்பா நாமதான் ஆயுதமில்லாமல் ஓடுறமெண்டால் நீ ஆயுதத்தோடை ஓடுறாய்” என கடித்தேன் நான். அவன் சிரித்தபடியும் ஓடிக்கொண்டும் சொன்னான் “ இந்த ஜே.ஆர் க்கு பகிடி வெற்றி தெரியாது. சும்மா பேச்சுக்கு தமிழீழம் எண்டு கேட்டால் அதுக்கு இப்பிடியே கலைக்கிறது என்றான். எனக்கு என்னவோ இன்றுவரை இதற்குள் சிந்தனையை கிளறுகிற ஒரு அரசியல் இழை பின்னியிருப்பதாகவே படுகிறது.