Archive for August 2006
நளாயினியின் “நங்கூரம்”
Posted August 20, 2006
on:- In: அறிமுகம் | இதழியல்
- Leave a Comment
கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்
“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”
அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று
நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்
ஆனால் நீயோ
அவனைப் பார்த்து
என்ன சிரிப்பு
எனக் கூறியபோது
ஏனோ அதிகம்
இடிந்துபோனது
நம் காதல்தான்.
போரபிமானம்
Posted August 5, 2006
on:- In: கவிதை
- Leave a Comment
அழிவுகளைக் கணக்கிட்டுக் கொள்ளும்
காலங்கள் இவை.
இராணுவவீரன் களைத்துப் போய் இருக்கிறான்.
குண்டுவீசி பெயர்த்த இடிபாடுகளின் நடுவே
இவன் ஒரு சிகரட்டையோ கட்டையோ ஊதியபடி
இளைப்பாறுகிறான்.
பதவிநடை பிசகாமல் அரசியல்வாதிகள்
ஒலிவாங்கி; நோக்கி நடக்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் குறிப்பெடுக்கின்றனர்.