ஹிஷாலினிகள்

முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்தப்பட்ட ஹிஷாலினியின் மரணம் உயிர்த்தெழும்பியிருக்கிறது. அது ஒரு குறியீட்டு வடிவமாக மாறியிருப்பதே அதன் சிறப்பம்சம். அது ஹிஷாலினிகள் குறித்த கரிசனையையும், பொதுவெளிக்குள் நிகழ்த்தப்படும் எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படைத்தன்மையையும்; -தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுள்- நிகழ்த்திக்கொண்டிருப்பது முன்னோக்கிய ஒரு மாற்றம்தான். அது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அரசியல் தலையீடுகளற்றதும் நேர்மையானதுமான பொலிஸ் விசாரணையும் நீதிமன்றமும்தான் புலப்படுத்த முடியும்.

Continue reading “ஹிஷாலினிகள்”

விடுதலையின் நிறம்

அடுத்தநாள் காலையில் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்படப்போகும் தனது குழந்தைகளை ஊடுருவிக் கவனித்துக் கொண்டிருப்பாள்; விடிவதற்குமுன் அந்தக் குழந்தைகள் செத்துவிட வேண்டும் என்றுகூட அவள் விரும்புவாள், தனது குழந்தைப்பருவத்திலிருந்தே தன்னை காட்டுத்தனமாக நடத்திய அந்த அமைப்பால் இழிவுபடுத்தப்பட்ட ஓர் அப்பாவித் தாய் அவள். “(பக்.90)

அடிமைமுறைமையிலிருந்து வடியும் ஊனமாக இந்த வரிகள் நெளிகின்றன.

Continue reading “விடுதலையின் நிறம்”