“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த ~மறுப்புக்கான| சமூக நியாயத்தை வைக்க முற்படுதல் என்ற நேர்மையான வழியில் இதை உரையாட முன்வருவதே சரியாக இருக்கும். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இருமைகளில் சிக்குண்டு இருப்பது இவ்வகை தேக்கத்தை கடக்க முடியாத நிலையில் பலரை விட்டுள்ளது ஒருவகை அவலம்தான்.

Continue reading ““பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்”

நான் சமாதானத்தை நேசிப்பதால்… -அலேகிரியா

யுத்தத்தையல்ல, நான்

சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்…

பசித்திருக்கும் குழந்தைகளையும்

உருவழிந்த பெண்களையும் மட்டுமல்ல

ஊமைகளாக்கப்பட்ட மனிதர்களையும் நான்

பார்க்க விரும்பாததால்…

களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும். Continue reading “நான் சமாதானத்தை நேசிப்பதால்… -அலேகிரியா”