அதர் இருள்

அகரன் பிரான்ஸ் இல் இருக்கும் ஓர் இளம் எழுத்தாளர். பாரிசின் -குறிப்பாக லாசப்பலின்- தமிழ்வாழ்வுச் சூழலிலிருந்து தூரத்தில் வதியும் சந்தர்ப்பம் கிடைத்ததாலோ என்னவோ, அவரது எழுத்துக்களின் உள்ளடக்கம் தமிழ்ப் பரப்புக்குள் குறுகி நிற்கவில்லை. தமிழ்ப் புலம்பெயர் இலக்கியத்தில் ஒரு விசாலத்தை அவரது எழுத்துக்கள் காட்டிநிற்கின்றன. அவரது எழுத்துநடை அலாதியானது. இந்த அம்சங்கள் அகரனது தீவிர வாசகனாக என்னை ஆக்கியது என நம்புகிறேன்.

Continue reading “அதர் இருள்”

ஹிப்பி

1970 களில் எமது விடலைப் பருவத்தில் ஹிப்பி பற்றிய செய்திகளை வாசித்தும் கேட்டும் அறிந்தேன். அவர்களை சடை வளர்ந்த தலையுடன், கசங்கிய உடையுடன், வாழ்க்கை வெறுத்த மனிதர்களாக, போதைப் பொருள் பிரியர்களாக வெள்ளைநிறத்துடன் ஒரு தோற்றத்தை வரைந்துகொண்டேன். பின் யாழ் நகரில் அந்த மனவரைவுத் தோற்றத்தில் ஒருசிலரை அப்படி பார்த்தேன். அவர்கள் ஹிப்பிதானா இல்லையா என எனக்கு இப்போதும் தெரியாது. 80 களின் ஆரம்பத்தில் கொழும்பில் பார்த்த உருவம் எனது மனவரைவை தோற்றத்தில் மட்டும் செழுமைப்படுத்தியிருந்தது. பின்னரான காலத்தில்தான் அவர்களின் எதிர்க் கலாச்சார எழுச்சி பற்றி அறிந்துகொண்டேன்.

Continue reading “ஹிப்பி”

குரங்கின் கதை

இலங்கை அரசு சீனாவுக்கு முதற் கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய இருப்பதான செய்தி தற்போதைய பேசு பொருளாகியுள்ளது. சீனா வாங்குகிறது என்றதுமே இறைச்சிக்காகத்தான் என தலைக்குள் எழும் சித்திரம் சரியானதா என்ற கேள்வி இருக்கிறது. எனது ஞாபகம் சரியானால், இலங்கையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் குரங்கு இறைச்சியை விடுதி மாணவர்களுக்கு சமைத்துக் கொடுத்தது தெரியவந்து பரபரப்பாக பேசப்பட்டது. மான் இறைச்சிபோல் மிருதுவானதாக இருந்ததால் மாணவர்கள் இதற்கு “தொங்கு மான்” இறைச்சி என ஒரு பெயரை சூட்டினார்கள். எனவே இறைச்சிக்கான ஏற்றுமதி என ஒரு சாரார் நினைப்பதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ளவும் முடிகிறது.

Continue reading “குரங்கின் கதை”

தோழர் தேவா- நினைவுக் குறிப்பு

ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமாகிய தோழர் தேவா அவர்கள் கடந்த 25.03.2023 அன்று தனது 70 வது வயதில் எமை விட்டுப் பிரிந்தார். 1983 இலிருந்து சுவிஸ் இல் தொடர்ச்சியாக வேலைசெய்து, பின் ஓய்வுபெற்று தான் பிறந்த மன்னார் மண்ணுக்கு திரும்பி வாழ்ந்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், டொச் (ஜேர்மன் மொழி), சிங்களம் ஆகிய மொழிகளில் ஆழமான புலமையுடையவராக இருந்தார். நீண்ட இழுத்தடிப்புகளோடு குழந்தைப் போராளிகள் என்ற நூலை சுவிஸிலிருந்தபோது முதல் நூலாக வெளிக்கொணர்ந்த அவர் இலங்கையில் இருந்தபோது அம்பரயா, அனொனிமா, நீண்ட காத்திருப்பு, என் பெயர் விக்டோரியா போன்ற முக்கியமான நூல்களை தமிழுக்குப் பெயர்த்திருந்தார். அவரது மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. தோழர் தேவாவுடனான நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.

Continue reading “தோழர் தேவா- நினைவுக் குறிப்பு”

அந்தரம்

நாவல் அறிமுகம்

இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல்.

Continue reading “அந்தரம்”

எங்கே போய் முடியப்போகிறது

ஜோன் மெயர்ஷைமர் அமெரிக்காவின் ஒரு அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும் சர்வதேச உறவுகளுக்கான நிபுணரும், சிக்காக்கோ பல்கலைக் கழக பேராசிரியரும் ஆவர். அரசியல் சிந்தனையில் தாக்கம் செலுத்துகிற சிந்தனையாளர்களில் இவர் முக்கியமானவர். உக்ரைன் ரசிய பிரச்சினை குறித்து அவர் 2008 இலிருந்தே பேசிவருகிறார். அவர் உட்பட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் போன்ற சிந்தனையாளர்கள் பலரும் உக்ரைன்-ரசிய யுத்தம் ஓராண்டு என்பதை மறுக்கிறார்கள். 2014 இலிருந்து அது தொடங்கிவிட்டதாகவும் அது ஒன்பதாவது ஆண்டில் காலடி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்

Continue reading “எங்கே போய் முடியப்போகிறது”

தெரியாமல் போய்ச்சு!

நெடுமாறனின் பிரபாகரன் கதை

  1. இப்போ 2023. இடையில் 14 ஆண்டுகள். தலைவருக்கு இப்போ நரைவிழுந்திருக்கிறது. தாடி வளர்ந்திருக்கிறது. விடுதலைத் தீயை அவர் ஏந்தியிருக்கிறார். வெளியுலகிலிருந்து துண்டித்த கூட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வருகிறார். சரியான தருணம். அதென்ன சரியான தருணம் என நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். தலைவர் வருவார். திட்டத்தை அறிவிப்பார். தமிழீழம் கிடைக்கும். தமிழீழப் படம். இயக்குநர் யார் என்பதும் நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். ஊடகங்களெல்லாம் அரைச்சு அரைச்சு தீவனமாக எமக்கு வழங்குகிறது. நாம் எவளவு பெரிய முட்டாள்கள் என நெடுமாறன், காசி கோஸ்டியும் ஊடகங்களும் நினைத்திருக்கலாம். இருக்கட்டும்.
Continue reading “தெரியாமல் போய்ச்சு!”

புதியதோர் உலகம்

– உள்ளும் புறமும்

புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே அதற்குக் காரணம்.

Continue reading “புதியதோர் உலகம்”

Vertical Forest

கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது. செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன.

Continue reading “Vertical Forest”

பிசாசு

மேற்குலக “புலம்பெயர் தமிழர்கள் வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டு…” என ஒரு ஆயுதத்தை புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு அல்லது நெருக்குதலுக்கு சாமான்ய மனிதஜீவியிலிருந்து, (ஒரு பகுதி) புத்திஜீவிகள் வரை தமக்குள் கைமாற்றிக் கொள்கிறார்கள். இதுபற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. இது உண்மையா மாயையா, இதன் அடிப்படை காரணம் என்ன என்பதே அந்த யோசனை.

Continue reading “பிசாசு”