இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற
ஓவியங்கள் உருவழிந்துபோன
வரலாற்றை பனிக்கால தேவதைகள்
நிலமெங்கும் மலையெங்கும்
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும்.
நதியிடம் சொல்லி
அல்லது சொல்ல முயற்சித்து
மறைந்துபோகின்றனர் அவர்கள்.