அபத்தம்

வித்தியாவின் பாலியல் சித்திரவதைக் கொலை தொடர்பாக எதிர்பாராத அளவில் வடக்கு கிழக்கிலும் புத்தளம் போன்ற பிரதேசங்களிலும் ஓர் எதிர்ப்புப் போராட்டம் வெளிக்கிளம்பியுள்ளது. மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்குள் மெல்ல மெல்ல ஆழப்புதைந்த ஒரு சமூகம் மெல்லத் தலையெடுத்து வாழ்வியல் வெளிகளில் சமூக மனத்துடன் உலவத் தொடங்கியிருக்கிறது. தனது தொலைந்துபோன விழுமியங்கள் மீதான பச்சாதாபம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வன்முறைக்குள் அடக்கிவைக்கப்பட்ட அதன் மனித உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தப்படுவது இயல்பு. தனிமனித உளவியலானாலும் சமூக உளவியலானாலும் அதேதான் நிலைமை.

இங்கு வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுஞ்செயலைக் கண்டித்து அது எழுந்திருக்கிறது. தனிமனித உளவியலின் தொகுப்பான சமூக உளவியல் வெளிப்பாடு இது. இதை வித்தியா என்ற தனிநபருக்கான போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது இழந்துபோன விழுமியங்களை மீளுருவாக்கம் செய்ய ஏங்கும் சமூக மனங்களின் போராட்டமாக வரையறுக்க முடியும்.

Continue reading “அபத்தம்”

பிறழ்வு

முதலில் வித்தியாவுக்கு எனது கனத்த அஞ்சலிகள்.

வித்தியாவின் இழப்பின் மீதான தார்மீக கோபங்களிலிருந்து பிறழ்ந்து விழும் சொற்கள் இக் குறிப்பை எழுதத் தூண்டியது.

மாணவி வித்தியாவை கொன்றொழித்த குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பெண்ணுடலின் மீதான மலின அரசியலை நடத்தி காசு பொறுக்கும் குறுக்குவழியில் ஈடுபடாமல் குற்றவாளிகளை அம்லப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இவையிரண்டுக்குமான போராட்டங்கள், அழுத்தங்கள் எழுவது ஓரளவாவது பயன்தரும்.

Continue reading “பிறழ்வு”

தாழ்திறவாய்.

அவள் அனாதையாகிவிட்டிருந்தபோது கவனித்தாள், தன்மீது
ஓர் இருள் துண்டொன்று போர்த்தப்பட்டிருப்பதை.
தாழப் பறந்த கிபீர் விமானங்கள்
கிழித்துவிட்டிருந்த துண்டாக இது இருக்கலாம்.
நிலமதிர வெடித்துச் சிதறிய குண்டின் செல்கள்
அரிந்தெறிந்த துண்டாகவும் இருக்கலாம்.
எது எப்படியாகிலும் அவள் அதைப் போர்த்தியிருந்தாள்
அல்லது
அது அவளைப் போர்த்தியிருந்தது.

Continue reading “தாழ்திறவாய்.”

எனது வார்த்தைகளுள் நான்

நண்ப,
யன்னல்கள் திறந்திருந்த காலமதில்
பரிமாறிய வார்த்தைகள் இன்னமும்
தொலைந்துபோய்விடவில்லை என நம்புகிறேன்.
முரண்கள் மோதி மோதி வளர்ந்த எம் உறவு – இன்று
முகநூல் நட்பாய்
“லைக்” குறியீடாய்
தேய்ந்து போகிறதா என அச்சப்படுகிறேன்.
எனது வார்த்தைகள் உண்மையானவை – அதில்
எப்போதும் ஈரமும் இருக்கும்.
பிம்பங்கள் வரையும் தூரிகைகளின் படையெடுப்பு
விமர்சனங்களை தாக்கியழிக்கிற காலமிது.
மௌனத்தை அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன்.
அது ஓர் நெடுவீதியாய் நீண்டு
என்னையும் உன்னையும் தன்
முனைகளால் விலக்குப்பிடிக்கிறது அல்லது
தள்ளிக்கொண்டிருக்கிறது.
என்னிடம் தூய்மைகள் எதுவும் இல்லை.
அழுக்கை நான் வெறுத்தபடியேதான் நகர்கிறேன்.
நெடுவீதி எமை தூரப்படுத்தும் இடைவெளியை
தனிமை நிரப்பிக்கொண்டிருக்கிறது.
தனிமையை நான் நேசித்தபடி இருப்பேன் – அதில்
தொங்கிக்கொண்டிருக்கிறது எனது ஆன்மாவின் வாழ்வு.

10052015