நெடுமாறனின் பிரபாகரன் கதை
- இப்போ 2023. இடையில் 14 ஆண்டுகள். தலைவருக்கு இப்போ நரைவிழுந்திருக்கிறது. தாடி வளர்ந்திருக்கிறது. விடுதலைத் தீயை அவர் ஏந்தியிருக்கிறார். வெளியுலகிலிருந்து துண்டித்த கூட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வருகிறார். சரியான தருணம். அதென்ன சரியான தருணம் என நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். தலைவர் வருவார். திட்டத்தை அறிவிப்பார். தமிழீழம் கிடைக்கும். தமிழீழப் படம். இயக்குநர் யார் என்பதும் நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். ஊடகங்களெல்லாம் அரைச்சு அரைச்சு தீவனமாக எமக்கு வழங்குகிறது. நாம் எவளவு பெரிய முட்டாள்கள் என நெடுமாறன், காசி கோஸ்டியும் ஊடகங்களும் நினைத்திருக்கலாம். இருக்கட்டும்.