மொரட்டுவ பல்கலைக் கழகம். கட்டடக் கலை பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாண தமிழர்கள் தரப்படுத்தல் முறையைத் தாண்டி மிக அதிக புள்ளிகளை தாங்கியபடி வருவர். சிங்கள மாணவர் குறைந்த புள்ளிகளோடு வந்தவர்கள் பலர் இருப்பர். நம்மடை ஆட்களின் ஒரு ஏளனப் பார்வை பிறகெல்லாம் தவிடுபொடியாகிவிடும். காரணம் சிங்கள மாணவர்களின் சிருஸ்டிப்புத்தன்மை அவர்களின் டிசைனில் எமது எல்லைக்கோடுகளை முறித்துப் போட்டுவிடும். திருகோணமலை மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்களும் தமது சிருஸ்டிப்பில் யாழ் மாணவர்களை விலத்தி முன்னே சென்றுவிடுவர். அவளவு கட்டுப்பெட்டித்தனமான இறுகிப்போன யாழ் மனநிலைக்குள் புள்ளிகள்தான் பொரித்துக் கொண்டிருக்கும்.