முதலில் வித்தியாவுக்கு எனது கனத்த அஞ்சலிகள்.
வித்தியாவின் இழப்பின் மீதான தார்மீக கோபங்களிலிருந்து பிறழ்ந்து விழும் சொற்கள் இக் குறிப்பை எழுதத் தூண்டியது.
மாணவி வித்தியாவை கொன்றொழித்த குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பெண்ணுடலின் மீதான மலின அரசியலை நடத்தி காசு பொறுக்கும் குறுக்குவழியில் ஈடுபடாமல் குற்றவாளிகளை அம்லப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இவையிரண்டுக்குமான போராட்டங்கள், அழுத்தங்கள் எழுவது ஓரளவாவது பயன்தரும்.