எனது கல்வி தகைமையைக் கேட்கிறாய்,
கொடுப்புக்குள் சிரிக்கிறாய்.
என்னருகில் நின்று உயரத்தைப் பார்க்கிறாய்,
நீ உயரம் என்கிறாய்
மயிரற்றுப்போன எனது தலையைப் பார்த்து
உனது முடியை கோதிவிடுகிறாய்.
பனி பொழிந்த நிலம்
வெண்முகில்களை சீவி
துருவலாய்க் கொட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
இலைகள் சருகுகளாய் உதிர்ந்து கொட்டியிருந்தபோது
மரங்கள் தமது அர்த்தத்தை இழந்திருந்தன – அப்போ
எனது கமராவை நான் உறைக்குள் புதைத்திருந்தேன்.
இப்போ உறைக்குள்ளிருந்து உருவி எடுத்தேன்.
இயக்கவாத மாவீரர் தினம்!
நவம்பர் 27 மாவீரர் கொண்டாட்ட நாள்!. மனிதர்களின் உயிரை மதித்தல் என்பது மிகப் பெரிய அறம். தன்னலத்தைத் தாண்டி பொதுநலனோடு சிந்தித்தல் என்பது மாற்றங்களுக்கான வித்து. அதை செயற்படுத்த முனைபவர்கள், அதற்காக தமது நலன்களை மட்டுமல்ல தமது உயிரைக்கூட அர்ப்பணிக்க முன்வருபவர்களில் பெரும் பகுதியினர் இயக்கங்களில் இணைந்தார்கள். அவர்களை நாம் கொண்டாடுவது தகும்.
Continue reading “இயக்கவாத மாவீரர் தினம்!”ஜெய் பீம் – சூழும் அரசியல்!
தமிழ்ச் சமூகத்துள் இன்று அதிர்வை ஏற்படுத்தியுள்ள ஒரு திரைப்படம் ஜெய் பீம் என்பதற்கு எழுந்திருக்கிற சர்ச்சைகள் ஓர் அசல் சாட்சி.
• உண்மை-புனைவு முரண்பாடு
• திரைப்படத்துறையின் பொதுப் போக்கு
• அரசியல் கட்சிகள் நடத்துகிற தேர்தலிய அரசியல்
• இழிவுபடுத்தல்கள்
• புனிதங்கள்
• காலம்-வெளி
என பல காரணிகள் இந்த சர்ச்சைகளை வடிவமைக்கின்றன.
ஜெய் பீம்
திரை விலக்கும் திரை
சூர்யாவின் நடிப்பிலும் ஜோதிகா-சூர்யா இணைந்த தயாரிப்பிலும் ஞானவேலின் திரைக்கதை இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். எல்லோருமே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை திரையிலும், அதன்பின்னரான அவர்களது பேட்டிகளிலும் காணக் கிடைக்கிறது. அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகை மாற்றிப் போட்டு உண்மைக்கும், பேசப்படாதவற்றைப் பேசுதல் என்ற துணிபுக்கும் நெருக்கமாக பாதையமைத்திருக்கிற திரைப்படங்களில் ஜெய் பீம் க்கும் ஓர் இடமுண்டு. அதனால் திரைப்படம் குறித்து பேசப்பட வேண்டிய தேவை அதிகமாகிறது. மிக அதிகளவிலான நேரம்ச விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன. அதற்கு தகுதியான படம் அது. கொண்டாடப்பட வேண்டியது.
Continue reading “ஜெய் பீம்”யொஹானியின் பாடல்
யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.
Continue reading “யொஹானியின் பாடல்”வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !
ஈழத்தில் சாதிய மனநிலை மீண்டும் வன்முறையை முன்னுக்குத் தள்ளி வீரியமடைவதை வட்டுக்கோட்டையில் 19.09.2021 நடந்த சாதிய ரீதியிலான தாக்குதல் நிரூபித்துள்ளது. வெறும் கையுடன் தமது அன்றாட வாழ்வை கூலித்தொழில் மூலம் ஓட்டிக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வேலைவெட்டியின்றி வெளிநாட்டுப் பணத்தில் சீவியம் நடத்தும் ஆதிக்கசாதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வாள்சுழற்றியிருக்கிறார்கள். அரை மணித்தியாலம் அந்தத் தெருவையே கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள்.
Continue reading “வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !”சிற்பி
- குறும்படம்
(முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு வாசியுங்கள்)
நோர்வே தமிழ் பிக்கர்ஸ் (N.T Picture) உருவாக்கியிருக்கும் 11 நிமிட குறும்படம் சிற்பி. இது ஒரு abstract வகைமைக்குள் வருகிறதாலும், அநாவசிமற்றவைகள் காட்சிகளுக்குள் அலையாமல் செறிவாக செதுக்கப்பட்டிருப்பதாலும் இதை ஒரு “திரை ஓவியம்” என சொல்லுதல் பொருத்தமாகும்.
Continue reading “சிற்பி”9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் !
- டானியல் கன்ஸர்
பிம்பப்படுத்தப்பட்ட நியூயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து 20 வருடங்களாகிறது. இதையொட்டி 9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் என்ற தலைப்பில் அறியப்பட்ட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் Basel நகரில் (11.9.21) உரையாற்றியுள்ளார். அவ் உரையின் முக்கியமான பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.
Continue reading “9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் !”துணிச்சல்காரி
Malalai Joya
மேற்குலகின் தயாரிப்பாகி நோபல் பரிசுவரை சென்றிருக்கும் மலாலாய் அல்ல இந்த மலாலை. இவர் மேற்குலகையும் விமர்சிக்கும் மலாலாய் யோயா
இந்ததத் துணிச்சலான ஆப்கான் பெண்ணை தெரிந்துவைத்திருங்கள். இவை பழைய காணொளிகளும் பதிவுகளும். அறிமுகத்திற்காக இங்கு பதிகிறேன். தற்போதைய ஆப்கான் நிலைமையில் இந்த துணிச்சல்காரியின் பாதுகாப்பு முக்கியம். அவளது குரல் வெளிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
// ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும்தான் இந்த குழுவில் இருக்கப்போகிறவர்கள். அரசியலைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவில் யார்யாரெல்லாம் இருக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளோடுதான் நீங்கள் இங்கு வந்து குந்தியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நமது நாட்டின்மீது நடாத்தப்படுகிற போர்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் காரணமானவர்கள். பெண்களுக்கு எதிரான மோசமான ஒடுக்குமுறைகளை செய்பவர்களும் இவர்களே. இவ்வாறான மோசமான கிரிமினல்களிடம்தான் நாட்டின் தலைவிதியை ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகளுக்கு உரியவர்களல்ல. அவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.//
- இரு பழைய கட்டுரைகள் இவை
- https://sudumanal.com/2016/07/16/the-bravest-woman-malalai-joya/
- https://sudumanal.com/2015/06/28/dust-in-the-eyes-of-the-world/
- காணொளி






