Category: முகநூல் குறிப்பு
ஒழுங்கைக்குள்ளால் வரும் ஒழுக்கவாதம்
மொரட்டுவ பல்கலைக் கழகம். கட்டடக் கலை பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாண தமிழர்கள் தரப்படுத்தல் முறையைத் தாண்டி மிக அதிக புள்ளிகளை தாங்கியபடி வருவர். சிங்கள மாணவர் குறைந்த புள்ளிகளோடு வந்தவர்கள் பலர் இருப்பர். நம்மடை ஆட்களின் ஒரு ஏளனப் பார்வை பிறகெல்லாம் தவிடுபொடியாகிவிடும். காரணம் சிங்கள மாணவர்களின் சிருஸ்டிப்புத்தன்மை அவர்களின் டிசைனில் எமது எல்லைக்கோடுகளை முறித்துப் போட்டுவிடும். திருகோணமலை மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்களும் தமது சிருஸ்டிப்பில் யாழ் மாணவர்களை விலத்தி முன்னே சென்றுவிடுவர். அவளவு கட்டுப்பெட்டித்தனமான இறுகிப்போன யாழ் மனநிலைக்குள் புள்ளிகள்தான் பொரித்துக் கொண்டிருக்கும்.
உனக்கென்ன லூசோ !
இன்று சனிக்கிழமை. மாலை நேரம். வழமைபோல் எனக்கு லீவு. நானும் மயிலனும் வைன் குடித்துக் கொண்டிருந்தோம். மைலன் பக்ரரியிலை என்னோடை வேலைசெய்யிறவன். வழமையாக மே மாதம் அதுவும் நடுப் பகுதியும் தாண்டிவிட்டது. நல்ல வெயில் எறிக்க வேணும். ஆனால் ஒரே மழை. இரண்டு கிழமையாக ஒரே மழை. குளிர்வேறை. அதாலைதான் வைன். இல்லாட்டி பியர் போத்தலோடை இருந்திருப்பம்.
புகலிட அரசியலின் முளைப்பு
இலண்டனில் நடந்துகொண்டிருக்கும் 40வது இலக்கியச் சந்திப்பில் சாத்திரி அவர்கள் புகலிட அரசியல் போக்கு என்பது பற்றி பேசினார். ஆரம்பத்தில் ஒரு கட்டத்தில் அரசியலற்ற சமூகமாக இது இருந்தது எனவும் 90 களின் ஆரம்பத்தில்தான் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்ததாகவும். அது சுயநலத்தின் அடிப்படையில், தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் இருந்திருக்கலாம் என்ற கருத்துப்பட கூறியிருந்தார். புலிகள் இயக்கம்தான் -சரியோ தவறோ- புலம்பெயர் தமிழ் மக்கள் அரசியல்மயப்பட காரணமாக இருந்து, அது தமிழர் என்ற அடையாளம் தேடும் அரசியல் என்பதாகவும் குறிப்பிட்டதாக (காணொளி மூலம்) நான் விளங்கிக் கொண்டேன்.
சாத்திரியின் வரவு எந்தத் தீட்டை உண்டுபண்ணிவிட்டது?
இலக்கியச் சந்திப்பு பற்றிய வியாக்கியானங்கள் அவரவர் மொழியில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பொசிற்றிவ் அம்சங்களை மறுதலிக்க முடியாதது ஒருபுறம் இருக்க, அதன் வேலைமுறைகள் பற்றி கேள்விகள் இருக்கின்றன. உரையாடல் என்று வருகிறபோதுகூட இந்த 24 வருட காலப் பகுதியில் நாம் எவ்வாறான சனநாயகப்பட்ட முறையில், தொனியில், உடல்மொழியில் விவாதிக்கப் பழகியிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளப் பழகியிருக்கிறோம்.
Continue reading “சாத்திரியின் வரவு எந்தத் தீட்டை உண்டுபண்ணிவிட்டது?”
தமிழக மாணவர் போராட்டம் – ஒரு குறிப்பு
தமிழக மாணவர் போராட்டங்களைப் பற்றிய குறிப்பை எழுதுவது என்பது சங்கடங்களுக்கு உட்பட்ட ஒன்றுதான். என்றபோதும் எழுதியாக வேண்டும்.
இனப்படுகொலையாளர்களை சர்வதேச விசாரணை மன்றத்தில் நிறுத்து! என்ற கோரிக்கை முக்கியமானது. காலப் பொருத்தம் வாய்ந்தது. தமிழக மக்களிடமிருந்தான ஒரு தார்மீக ஆதரவை சரியாகப் புரிந்துகொண்டது என்பதையும் பதிவுசெய்யலாம்.
சீசனோ, பாசனோ என்ன இழவோ…
வடமராட்சியின் பிரபல கல்லூரிகளில் அதுவும் ஒன்று. பி.ரி மாஸ்ரர் பாடசாலையின் மைதானத்தில் கால்பந்தும் பழக்குவார். ஒருநாள் அல்ல, பலமுறை அதை தான் கவனித்ததாக என் நண்பன் இப்போதும் சொல்லிச் சிரிப்பான். பெனால்ரி கிக் (Penalty kick) அல்லது கோர்ணர் கிக் (corner kick) அடித்துக் காட்டுவார். கோல்போஸ்ற்குள் பந்து பிய்ச்சுக்கொண்டு போனால் “இப்பிடித்தான் அடிக்கவேணும்” என்பார். வெளியில் போனால் “இப்பிடித்தான் நீங்கள் அடிக்கிறது” என்பார்.
முன்னிலை சோசலிசக் கட்சி – ஓர் அவதானிப்பு
1983 யூலை 26. தீமூண்டெழுந்த கொழும்பு புறநகர்ப் பகுதியின் புகைமண்டலத்தை அப்போ காண்கிறோம் நாம். அதேவேகத்தில் தமிழ் சிங்கள கலவரம் என்ற செய்தியும் எட்டிவிடுகிறது. பல்கலைக்கழகத்தின் விடுதியில் நாம் (55 தமிழர்கள்) இருளத் தொடங்கினோம். பயம். சுற்றிவர சிங்கள மக்கள் வாள்களுடனும் பொல்லுகளுடனும் நிற்பதாக கதைகள் தைத்துக்கொண்டிருந்தன.இரவாகியது. எம்மை விடுதிக்குள் இருக்கும்படி கூறுகிறார்கள் அந்த சில சிங்கள சக மாணவர்கள். அங்குமிங்கும் ஓடித்திரிந்தார்கள். இரவுச் சாப்பாட்டை பார்சலாகக் கொண்டுவந்தார்கள். லைற் எதையும் போடவேண்டாம் என்ற எச்சரிக்கையுடன், பயம் காவிய எமது முகங்களை விடியும்வரை யன்னலோரம் தொங்கப்போட்டிருந்தோம். விடியும்வரை அந்த மாணவர்கள் கொட்டன்களுடன் எமது விடுதியைச் சுற்றி காவல் காத்தார்கள்.
ஆசைஆசையாய் வருகிறது – ஒரு றிசானாக் குறிப்பு
கம்பளிப்பூச்சியை கையிலேந்தி அதன் மென்மையை லயித்திருந்த அந்தச் சிறுவயதில் என் அப்பா கடவுளை அறிமுகமாக்கினார். இந்த உயிரினங்களின் மீதான என் நேசிப்பில் கடவுளில் பிரியமானேன் நான். கடவுள் உயிரினங்களை சிருஷ்டித்ததாக எனக்கு அறிமுகம் செய்தார். எல்லாக் கடவுளர்களும் சிருஷ்டிகள்.. படைப்பாளிகள்… அதனால் மனிதர்கள் உயிர்களை அழிப்பது பாவம் என்பார்.
Continue reading “ஆசைஆசையாய் வருகிறது – ஒரு றிசானாக் குறிப்பு”