மார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.

கால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் நிலவும் நாடுகள் இவை. மற்றைய விளையாட்டுகள் போலவே ஆண்களும் விளையாடுகிறார்கள். பெண்களும் விளையாடுகிறார்கள். ஆங்கிலத்தில் Team என்பதை டொச்சில் Mannschaft என்பார்கள். Mann என்பது ஆண். இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.

 வீதியை குறுக்காய்க் கடக்கும் மஞ்சள் வரிக் கோட்டுப் பாதைக்கு ஆங்கிலத்தில் Zebra-cross என்பார்கள். அதை டொச்சில் Fussgängerstrifen என்பார்கள். Fussgänger என்பது ஆண்பால் சொல்.(Fussgängerin என்பது  பெண்பால் சொல்). இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.

Continue reading “மார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.”

றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

24 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஓர் ஆளுமை றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

 

“…ஏப்ரல் 23, 1990 ரைம் சஞ்சிகையில் வெளிவந்த இக் கட்டுரை சுவிஸ் மனிதம் இதழ்-6 இல் (1990 யூலை , ஓகஸ்ட்) தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இக் கட்டுரை வெளிவந்த ரைம் சஞ்சிகை இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டது…”

ஏன் இந்தவகை ஒப்பீடுகள்?

//காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.// – பாலன் தோழர்

  சீமான் சொல்வது பச்சைப் பொய் என்ற ஒரு பதில் போதாதா ?

 பாலுமகேந்திரா ஒரு படைப்பாக்கத் திறனுள்ள கலைஞன். ஈழத்தில் பிறந்தார்தான். அதையும் தாண்டிய பெருவெளியில் அவரது படைப்புகள் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது. அவரும் அப்படியேதான் தனது படைப்புலகத்தில் இயங்கினார்.  அவர் பேசப்படும் கலைஞனாக பரிணமித்ததிற்கு அதுவும் ஒரு காரணம்.

Continue reading “ஏன் இந்தவகை ஒப்பீடுகள்?”

வாழைமரக் கதை

“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன? ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.

Continue reading “வாழைமரக் கதை”

போர்க்குற்றக் குரல்

பொதுநலவாய நாடுகளில் பங்காளிகளாக உள்ள நாடுகளில் கணிசமானவை இரத்தக்கறை படிந்த(யும்) நாடுகள்தான். ராஜபக்ச அன்ட் கோ அரசின் போர்க்குற்றங்கள் இம் மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்படுவது என்பது அதை எதிர்த்தல் என்று அர்த்தப்படாது. உண்மையில் அதன் கடினத்தன்மையை மென்மையாக மாற்றுதற்கே பயன்படும். Hard Image இனை Soft Image ஆக மாற்றும் ஒரு சம்பிரதாய அரங்கு. இலங்கை அரசு இதை நன்கு அறிந்தே வைத்துள்தால் அதை  கோலாகலமாக நடத்த ஓடித்திரிகிறது.

Continue reading “போர்க்குற்றக் குரல்”

சவாரி

எழுபதுகளின் இறுதிப் பகுதி. ரியூசன் கலாச்சாரம். சைக்கிள் மிதி. பருத்தித்துறையின் தம்பசிட்டி வீதியில் மாலை 5 மணியை முந்தியபடி நாம் (நேர விடயத்தில்) வெள்ளைக்காரர்களாய் இருப்போம். 5 மணியைத் தாண்டியால் நாம் வகுப்புக்குள் நுழைய முடியாது. கணித பாடத்தை „சாக்கர்“ நடத்த, சரியாக 5 மணிக்கு 5 நிமிடம் இருக்க -கால்நடையாக- கேற்றை வந்தடைவார். ஒருநாளுமே இந்த நியதி பிழைத்ததாக எனக்குத் தெரியாது.

Continue reading “சவாரி”

சீற்றம்

சிவகாமி அவர்களின் உரையாடல் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. தேவையானதும்கூட. அதே நேரம் அவரின் அந்த உரையாடல் காணொளிக்கு வந்திருக்கும் சில பின்னூட்டங்கள் பல அருவருப்பூட்டுபவையாக உள்ளன என்பதை கண்டுகொள்ளாமல் விடமுடியாது. அந்தவகைப் பின்னூட்டங்கள், நிலைத் தகவல்கள் தமிழ்த் தேசிய வெறியர்களினதும் ஒழுக்கவாதிகளினதும் “மனவளத்தை” வெளிப்படுத்துகின்றன.

Continue reading “சீற்றம்”

சித்திரம் பேசுதடி..!

இலங்கை அரசியல் மனநிலையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தமிழின உணர்வாளர்கள் மட்டுமல்ல, தமிழக புத்திஜீவிகளும் எந்தளவு புரிந்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வரும் கேள்வியாக உள்ளது. புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரதேசங்களில் நிழல் ஆட்சி புரிந்தபோது, ஆகா ஓகோ என உணர்வாளர்கள் (திரைப்பட இயக்குநர்கள், ஓவியர்கள், புத்திசீவிகள் என) தமிழகத்திலிருந்து படையெடுத்தவர்கள் அந்த நிழல் ஆட்சி பற்றி சித்திரம் வரைந்து பெருமிதப்பட்டனர். மக்கள் தரப்பிலிருந்து எதையும் கண்டுகொள்ளத் தவறினர்.

Continue reading “சித்திரம் பேசுதடி..!”

“செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி

இரட்டைக்கோபுரத்தாக்குதல் மீதான மதிப்பீடுகள் வெறுமனே, கொல்லப்பட்ட அப்பாவி மக்களோடு அல்லது பௌதீக அழிவுகளோடு அல்லது தீமை என்ற கருத்தியலோடு மட்டுப்பெற முடியாதவை. அது ஒரு குறியீட்டின் மீதான தாக்குதல். அதாவது உலக அதிகார ஒழுங்கின் மீதான, கேள்விகேட்கப்பட முடியாத அதிகார மையத்தின் மீதான -ஓர் எதிர்ப் பயங்கரவாத- தாக்குதல். அதனாலேயே உலக அதிகார சக்திகள் பதறிப் போயின. அந்த அதிர்வுகள் இன்னமும் அமைதியுறவில்லை.

Continue reading ““செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி”

நிழல் Hero ?!