காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?

இலங்கையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் தீவிரவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும்தான் இருக்கிறார்கள் என மகிந்த கூறியிருக்கிறார். சிங்கள மக்கள் முன்னிலைப் பாத்திரம் அளித்து தொடங்கிய இந்த எழுச்சியை அவர் இலாவகமாகவே இனவாத அரசியலாக திசைதிருப்புகிறார்.

Continue reading “காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?”

போருற்ற உலகு !

saurce : Reuters, Nato

யுத்தம் வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.

Continue reading “போருற்ற உலகு !”

ஒருவேளை..?

நாம் வாழுகிற கிராமம் சுமார் 7000 பேரை சனத்தொகையாகக் கொண்டது. இப்போது இருக்கும் வாடகை வீட்டில் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது. வேறு இடம் மாற எந்த விருப்பும் வந்ததில்லை. வீட்டின் யன்னலுக்கூடாக தெரியும் அல்ப்ஸ் (Alps) மலைத்தொடரும் முன்-அல்ப்ஸ் (front Alps) மலைகளும் வேலையின் எல்லா களைப்புகளையும் வாரியள்ளி எடுத்துச் சென்றுவிடும். வீட்டின் செற்றியில் இருந்தபடியே அதை பார்த்துக்கொண்டிருப்பேன்.

Continue reading “ஒருவேளை..?”

முஸ்கான் அலை

ஒவ்வொரு சம்பவங்களும் புதிதாக உருவாகிறது என்பதை விடவும், சமூகவலைத்தளங்களினாலும் இன்றைய தொழில்நுட்ப வசதியினாலும் அவை உடனுக்குடன் வெளிக்கொணரப்படுகிறது என்பதே பொருத்தமானது. எதிர்ப்புக்குரலுக்கு தளமாகவும் அநியாயங்களை காட்சி ரூபத்தில் அம்பலப்படுத்துவதாகவும் இன்றைய சமூக ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன என்ற அம்சங்கள் முக்கியமானது.

Continue reading “முஸ்கான் அலை”

முடிச்சுகள்

பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் 70 களில் முதலில் மைக்கல் கெலி என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்திலிருந்து ஆங்கில பாடம் படிப்பிக்க வந்திருந்தார். கொளுத்தும் வெயில் காலத்தில் அவர் கட்டைக் காற்சட்டையுடன் வந்தபோது கல்லூரி நிர்வாகம் அவரை அழைத்து நீளக்காற்சட்டை அணிந்து வருவதே கல்லூரியின் ‘டிசிப்பிளின்’ என்று சொல்ல, அவர் வீடு சென்று திரும்ப நீளக் காற்சட்டையுடன் வந்தார். எம்மைப்போல் அவரால் வெயிலை தாங்க முடியாததால் மிக அவதிப்பட்டார். கல்லூரி அசையவில்லை.

Continue reading “முடிச்சுகள்”

பிச்சைப் பாத்திரம்

கல்லூரியொன்றில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கணித ஆசிரியர் கேத்திரகணித தேற்றம் ஒன்றை நிறுவிக்காட்ட வகுப்பை ஏவினார். நான் சரியாகத்தான் நிறுவியிருந்தேன். ஆனால் வகுப்பின் முன்னால் நிற்கவைத்து பிரம்பால் தாக்கப்பட்டேன். “கேத்திரகணித புத்தகத்தில் ABC ஒரு முக்கோணம் என சொல்லி இத் தேற்றம் நிறுவப்பட்டிருக்கிறது. நீ XYZ ஒரு முக்கோணம் என போட்டு நிறுவியிருக்கிறாய். நீ எங்கையோ ரியூசனுக்குப் போகிறாய்” என்று அடித்தார். சிறிமாகால பஞ்சத்தில் இரண்டு வேளை கொஞ்சமாகச் சாப்பிடுவதே போராட்டமாயிருந்தபோது எங்கை ரியூசனுக்குப் போவதாம். இல்லை என்று மட்டும் சொன்னேன். அடியை வாங்கினேன். மாற்றி யோசிக்க நினைத்துப் பார்க்கக் கூடாதா என்ற உள்மனக் கேள்வியுடன் போய் அமர்ந்தேன்.

Continue reading “பிச்சைப் பாத்திரம்”

Vincent Van-Gogoh

கொலண்ட்டைச் சேர்ந்த வின்சன்ற் வான்கோ (1853-1890) ஒரு புகழ்பெற்ற post-impressionist ஓவியர். மேற்குலக ஓவிய வரலாற்றில் பாரிய தாக்கம் செலுத்தியவர்களில் அவரும் ஒருவர். ஒரு பத்து வருட காலத்தில் 2100 ஓவியங்களை அவர் வரைந்திருந்தார். இவைகளில் பெரும்பாலானவற்றை அவர் தனது வாழ்வின் கடைசி இரு வருடங்களில் வரைந்து தள்ளினார்.

Continue reading “Vincent Van-Gogoh”

Pixel Forest Turicum

சுவிஸ் கலைஞை Pipilotti Rist அவர்கள் (1962) பிரபல சூரிச் நகர கலைக்கூடத்தில் ( Zurich Kunsthaus) தனது கலை வேலைப்பாடொன்றை காட்சிப்படுத்தியுள்ளார். நவீன தொழில்நுட்பங்களையும் (கணனி, LED விளக்குகள்), கணக்கிடல்களையும் பாவித்து மண்டபம் ஒன்றை வேறு உலகமாக சிருஸ்டித்துள்ளார். 3000 லெட் விளக்குகள் ‘பளிங்குச் சிற்பி’க்குள் ஒளிர தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

Continue reading “Pixel Forest Turicum”

நெருக்கடி

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவு இலங்கை. நாம் ரின் மீனை இறக்குமதி செய்கிறோம். நிலமும் நீர்வளமும் வெயிலும் மழையும் உள்ள இந்த நிலத்தில் காய்கறிகளுக்காக அழுகிறோம். வீட்டுத் தோட்டங்களும் பற்றை வளர்ந்து கிடக்க மோட்டார் சைக்கிளில் ஊர்சுற்றுகிறோம். சில நூறு மீற்றர் தொலைவிலுள்ள கடையில் ஒரு கிலோ வெங்காயம் வாங்க மோட்டார் சைக்கிளை கலைக்கிறோம். யாழ்ப்பாண வாழ்நிலை இது. புகலிடம் வடபகுதிக்குள் காவி வந்த பவுசு, சொகுசு கலாச்சாரம் இதில் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறது.

Continue reading “நெருக்கடி”

யொஹானியின் பாடல்

யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.

Continue reading “யொஹானியின் பாடல்”