Through The Fire Zones

காலத்தைக் கைப்பற்றிய நூல் !


வன்னிப் போர்க்களத்தை குறுக்கறுத்து அதன் அவலத்தை முன்வைக்கிற நூல் இது. புகைப்பட ஊடகவியலாளர் அமரதாஸ் இன் 400 பக்கங்களைக் கொண்ட இந் நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிற இந் நிழற்படங்கள் கறுப்பு வெள்ளை என சொல்லப்படுகிற சாம்பல்நிற (grey) வடிவில் உள்ளன. A4 தாள் அளவீட்டில் வந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ஆவணமாக பார்க்கப்படக் கூடியது. புலிகளின் நிழல் அரசு கட்டியமைக்கப்பட்டிருந்த வன்னி பிரதேசத்துள் ஒரு சுயாதீன புகைப்பட ஊடகவியலாளராக அமரதாஸ் இருக்க முடிந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்.

Continue reading “Through The Fire Zones”

ஜெய் பீம்

திரை விலக்கும் திரை

சூர்யாவின் நடிப்பிலும் ஜோதிகா-சூர்யா இணைந்த தயாரிப்பிலும் ஞானவேலின் திரைக்கதை இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். எல்லோருமே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை திரையிலும், அதன்பின்னரான அவர்களது பேட்டிகளிலும் காணக் கிடைக்கிறது. அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகை மாற்றிப் போட்டு உண்மைக்கும், பேசப்படாதவற்றைப் பேசுதல் என்ற துணிபுக்கும் நெருக்கமாக பாதையமைத்திருக்கிற திரைப்படங்களில் ஜெய் பீம் க்கும் ஓர் இடமுண்டு. அதனால் திரைப்படம் குறித்து பேசப்பட வேண்டிய தேவை அதிகமாகிறது. மிக அதிகளவிலான நேரம்ச விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன. அதற்கு தகுதியான படம் அது. கொண்டாடப்பட வேண்டியது.

Continue reading “ஜெய் பீம்”

சிற்பி

  • குறும்படம்

(முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு வாசியுங்கள்)

நோர்வே தமிழ் பிக்கர்ஸ் (N.T Picture) உருவாக்கியிருக்கும் 11 நிமிட குறும்படம் சிற்பி. இது ஒரு abstract வகைமைக்குள் வருகிறதாலும், அநாவசிமற்றவைகள் காட்சிகளுக்குள் அலையாமல் செறிவாக செதுக்கப்பட்டிருப்பதாலும் இதை ஒரு “திரை ஓவியம்” என சொல்லுதல் பொருத்தமாகும்.

Continue reading “சிற்பி”

துணிச்சல்காரி

Malalai Joya

thanks for image : ctv news

மேற்குலகின் தயாரிப்பாகி நோபல் பரிசுவரை சென்றிருக்கும் மலாலாய் அல்ல இந்த மலாலை. இவர் மேற்குலகையும் விமர்சிக்கும் மலாலாய் யோயா

இந்ததத் துணிச்சலான ஆப்கான் பெண்ணை தெரிந்துவைத்திருங்கள். இவை பழைய காணொளிகளும் பதிவுகளும். அறிமுகத்திற்காக இங்கு பதிகிறேன். தற்போதைய ஆப்கான் நிலைமையில் இந்த துணிச்சல்காரியின் பாதுகாப்பு முக்கியம். அவளது குரல் வெளிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

// ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும்தான் இந்த குழுவில் இருக்கப்போகிறவர்கள். அரசியலைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவில் யார்யாரெல்லாம் இருக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளோடுதான் நீங்கள் இங்கு வந்து குந்தியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நமது நாட்டின்மீது நடாத்தப்படுகிற போர்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் காரணமானவர்கள். பெண்களுக்கு எதிரான மோசமான ஒடுக்குமுறைகளை செய்பவர்களும் இவர்களே. இவ்வாறான மோசமான கிரிமினல்களிடம்தான் நாட்டின் தலைவிதியை ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகளுக்கு உரியவர்களல்ல. அவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.//

  • இரு பழைய கட்டுரைகள் இவை
  1. https://sudumanal.com/2016/07/16/the-bravest-woman-malalai-joya/
  2. https://sudumanal.com/2015/06/28/dust-in-the-eyes-of-the-world/
  • காணொளி
Continue reading “துணிச்சல்காரி”

விடுதலையின் நிறம்

அடுத்தநாள் காலையில் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்படப்போகும் தனது குழந்தைகளை ஊடுருவிக் கவனித்துக் கொண்டிருப்பாள்; விடிவதற்குமுன் அந்தக் குழந்தைகள் செத்துவிட வேண்டும் என்றுகூட அவள் விரும்புவாள், தனது குழந்தைப்பருவத்திலிருந்தே தன்னை காட்டுத்தனமாக நடத்திய அந்த அமைப்பால் இழிவுபடுத்தப்பட்ட ஓர் அப்பாவித் தாய் அவள். “(பக்.90)

அடிமைமுறைமையிலிருந்து வடியும் ஊனமாக இந்த வரிகள் நெளிகின்றன.

Continue reading “விடுதலையின் நிறம்”

பச்சைக் குதிரை


எனது வாசிப்பு

பச்சைக் குதிரை ஒரு விளையாட்டு. அது இங்கே படிமமாக நாவலில் விரிகிறது. குனிஞ்சு நிக்கணும். ஒவ்வொருவரா தாண்டணும். குனிஞ்சு நிக்கிறவங்க மெல்ல உயரத்தைக் கூட்டினாலும் அவங்களைத் தாண்டிற வெறியோடு அவங்க முதுகை அமத்தி பாய்ந்து கடக்க வேண்டும்.

Continue reading “பச்சைக் குதிரை”

குமிழி- நாவல் மீதான வாசிப்புகள்(44), காணொளிகள்(6)

குமிழி நூலை PDF வடிவில் பெறுவதற்கான இணைப்பு :

*
  1. காணொளி வடிவில்

பாரதி (சுவிஸ்)
ரவின் திரு (யேர்மனி)
வைதேகி (இலங்கை)
அருள் எழிலன் (தமிழகம்)

புதியமாதவி (மும்பை)
சண்முகராஜா (தமிழகம்)

*

2. எழுத்து வடிவில்

Continue reading “குமிழி- நாவல் மீதான வாசிப்புகள்(44), காணொளிகள்(6)”

நினைவழியா வடுக்கள்

சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்

ninaivazhiyaa-vadukkal-10013330-550x550h
சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.

Continue reading “நினைவழியா வடுக்கள்”

வெண்ணிறக் கோட்டை

– ஓர் அலைக்கழிப்பு

(ஓரான் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை” என்ற நாவல் வாசிப்பும் உரையாடலும்-23 இல் 01.09.19 அன்று உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நாவல் குறித்து பல்வேறு பரிமாணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் நான் முன்வைத்த கருத்துகளின் விரிவு இப் பதிவு)

vennirak kooddai-4jpg
ஓரான் பாமுக் இன் ஆரம்பகால நாவல்களில் ஒன்று வெண்ணிறக் கோட்டை. ஓட்டோநாம் துருக்கிய சாம்ராஜ்யம் 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவிய பெரும் சாம்ராஜ்யம் 15ம் நூற்றாண்டிலும் பின்னர் 16ம் நூற்றாண்டிலும் அது வெனீஸ் மீது போர் புரிந்தது. இந்த இரண்டாவது காலகட்டத்தில் தொடங்கி, போலந்தின் வெண்ணிறக் கோட்டையை கைப்பற்ற நடந்த போர்வரையான காலப் பகுதியுள் வைத்து புனையப்பட்ட நாவல் இது.

Continue reading “வெண்ணிறக் கோட்டை”

கெய்சா (Geisha)

அறிமுகமும் அப்பாலும்

geisha book

 

கெய்சாக்களின் தோற்றம்

யப்பானின் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகத் தோன்றியவர்கள்தான் கெய்சா. இசை நாட்டியம் நடனம் காதல் காமம் என எல்லாமுமான கலைவடிவம் அவள். சிறுபான்மையாக ஆண் கெய்சாக்களும் இருந்தனர். அவர்களும் பெண் உடையிலேயே தோற்றமளித்தனர். பெண்கள் மிக உயரமான வெள்ளை மரக் காலணியையும் கிமோனோ என்ற பாரமான உடையையும் அணிந்திருப்பார்கள். கெய்சா ஆண்கள் வெள்ளை காலுறைகளைகளையும் கிமோனோவையும் அணிந்துகொள்வர். முகம் முற்றாக வெள்ளைப் பூச்சால் நிறைந்திருக்கும். கண் இமைகள் புருவங்கள் இதழ்கள் எல்லாவற்றையும் வெள்ளை, சிவப்பு, கறுப்பு என பூச்சுகள் மேய்ந்திருக்கும். தலை முடிகள் கொண்டையாக வாரிக் கட்டப்பட்டு குச்சிகள் சொருகப்பட்டு, தொங்கும் அலங்காரங்கள் கொண்டவளாய் காட்சியளிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு அழகுப் பொம்மைபோல இருப்பாள். சாமிசென் இசைக்கருவி உட்பட மேள இசையையும் வாசிப்பதில் கடுமையான பயிற்சி பெற்ற விற்பன்னர்களாக இருந்தனர். அரங்கியலிலும்கூட அவர்கள் தம்மை கலைஞர்களாக நிரூபித்துக்கொண்டவர்கள். நறுமணங்களை ஊகித்தறியும் ஆற்றலிலும் கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் என அவர்கள் ஒரு கலைப் பொக்கிசமாக இருந்தனர்.

Continue reading “கெய்சா (Geisha)”