கெய்சா (Geisha)

அறிமுகமும் அப்பாலும்

geisha book

 

கெய்சாக்களின் தோற்றம்

யப்பானின் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகத் தோன்றியவர்கள்தான் கெய்சா. இசை நாட்டியம் நடனம் காதல் காமம் என எல்லாமுமான கலைவடிவம் அவள். சிறுபான்மையாக ஆண் கெய்சாக்களும் இருந்தனர். அவர்களும் பெண் உடையிலேயே தோற்றமளித்தனர். பெண்கள் மிக உயரமான வெள்ளை மரக் காலணியையும் கிமோனோ என்ற பாரமான உடையையும் அணிந்திருப்பார்கள். கெய்சா ஆண்கள் வெள்ளை காலுறைகளைகளையும் கிமோனோவையும் அணிந்துகொள்வர். முகம் முற்றாக வெள்ளைப் பூச்சால் நிறைந்திருக்கும். கண் இமைகள் புருவங்கள் இதழ்கள் எல்லாவற்றையும் வெள்ளை, சிவப்பு, கறுப்பு என பூச்சுகள் மேய்ந்திருக்கும். தலை முடிகள் கொண்டையாக வாரிக் கட்டப்பட்டு குச்சிகள் சொருகப்பட்டு, தொங்கும் அலங்காரங்கள் கொண்டவளாய் காட்சியளிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு அழகுப் பொம்மைபோல இருப்பாள். சாமிசென் இசைக்கருவி உட்பட மேள இசையையும் வாசிப்பதில் கடுமையான பயிற்சி பெற்ற விற்பன்னர்களாக இருந்தனர். அரங்கியலிலும்கூட அவர்கள் தம்மை கலைஞர்களாக நிரூபித்துக்கொண்டவர்கள். நறுமணங்களை ஊகித்தறியும் ஆற்றலிலும் கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் என அவர்கள் ஒரு கலைப் பொக்கிசமாக இருந்தனர்.

Continue reading “கெய்சா (Geisha)”

எழுதத் தோன்றியது.

பொதுப்புத்தியின் பொது நீரோட்டத்தோடு வெகுமக்களில் பெரும் பகுதியினரும் (கேள்விகளின்றி) பயணிப்பதுதான் வாழ்க்கை ஒழுங்காக மனித ஒழுக்கமாகப் பேணப்படுகிறது. பொதுப்புத்தி இன்றி பொதுமக்கள் என்ற கட்டமைப்புக் கிடையாது. இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். எனவே பொதுப்புத்தியை நிராகரிக்க முடியாது. அதை விமர்சிக்க முடியும். அதிர்ச்சிக்குள்ளாக்குவதன் மூலம் அதை கேள்விக்கு உட்படுத்தி மேம்படுத்த முடியும். பொதுப்புத்தி என்பது வெகுமக்களின் தத்துவம் என்பார் கிராம்சி. எனவே அதை அறிவார்ந்த தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் மேல்நிலைக்குக் கொண்டுவருவதே மாற்றத்தை நேசிப்பவர்களின் கடமையாக இருக்க முடியும். இங்குதான் (அரசியல், சமூக) அமைப்புகள் மட்டுமல்ல, கலகக்காரர்களும் எதிர்மறுப்பாளர்களும் தமது பங்கை ஆற்றவேண்டியிருக்கும்.

Continue reading “எழுதத் தோன்றியது.”

மெர்சோவின் நட்சத்திரங்கள்.

எப்போதுமில்லாதவாறு இந்த வருடம் ஒரு நீளமான கோடைகாலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் வெப்பமாக இருந்தது. இன்று வேறு அலுவல்கள் இல்லை. அல்லது அவற்றை முக்கியமற்றதாக்கிவிட்டு எனக்காக ஒதுக்கிக்கொள்வதான முடிவுடன் வேலையால் வந்துகொண்டிருந்தேன். உடலை உரசிய இதமான காற்றும் வெப்பமும் “அதைச் செய்” என்பதுபோல் சைக்கிளையும் வருடிச் சென்றது. இண்டைக்கு (உடற் பயிற்சிக்காக) ஓடுவம் என்று முடிவெடுத்தேன்.

Continue reading “மெர்சோவின் நட்சத்திரங்கள்.”

புரட்டு

மேற்குலகின் முப்பெரும் மதங்களாக கிறிஸ்தவத்தை, இஸ்லாமை, யூத மதத்தை முன்வைப்பதானது ஐரோப்பிய மையவாத சிந்தனை முறைமை ஆகும்.. இந்த வரலாற்றுப் புரட்டு ஐரோப்பாவின் மேலாளுமை உருவாக்கத்தை நிகழ்த்த அவசியமாகவே அவர்களுக்கு இருந்தது.

யூதமதம் தோன்றிய இஸ்ரேல் ஐரோப்பிவிலா இருக்கிறது?

கிறிஸ்தவ மதம் தோன்றிய ஜெரூசலம் ஐரோப்பிவிலா இருக்கிறது?

இஸ்லாம் மதம் தோன்றிய மத்திய கிழக்கு ஐரோப்பாவிலா இருக்கிறது?

Continue reading “புரட்டு”

எந்தத் தயக்கமுமில்லை !

karunanithi

03.06.1924 – 07.08.2018

ஊடுருவும் மொழியோசையை தமிழில் துய்ப்பதானால் கலைஞர் கருணாநிதியின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் இலக்கிய நயத்துக்கும் கட்டுண்டு போகிறேன்.

Continue reading “எந்தத் தயக்கமுமில்லை !”

சோஃபியின் உலகம்

  • நூல் மீதான வாசிப்பு

01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

sophies world

சோபியின் உலகம்.

நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.

Continue reading “சோஃபியின் உலகம்”

வாசிப்பும் உரையாடலும் -17

01.07.2018 (சுவிஸ்)

// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//

36176870_1095311473956918_1272366941700358144_n

Continue reading “வாசிப்பும் உரையாடலும் -17”

ஆகுமா?

இலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடிமக்கள் பெயர்ந்து இலங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.

Continue reading “ஆகுமா?”

விதைப்பு

thuthukkudi

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.

Continue reading “விதைப்பு”

துயர ஓவியம்

புலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.

பிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.

*

புலிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறோம்.

பிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.

Continue reading “துயர ஓவியம்”