புரட்டு

மேற்குலகின் முப்பெரும் மதங்களாக கிறிஸ்தவத்தை, இஸ்லாமை, யூத மதத்தை முன்வைப்பதானது ஐரோப்பிய மையவாத சிந்தனை முறைமை ஆகும்.. இந்த வரலாற்றுப் புரட்டு ஐரோப்பாவின் மேலாளுமை உருவாக்கத்தை நிகழ்த்த அவசியமாகவே அவர்களுக்கு இருந்தது.

யூதமதம் தோன்றிய இஸ்ரேல் ஐரோப்பிவிலா இருக்கிறது?

கிறிஸ்தவ மதம் தோன்றிய ஜெரூசலம் ஐரோப்பிவிலா இருக்கிறது?

இஸ்லாம் மதம் தோன்றிய மத்திய கிழக்கு ஐரோப்பாவிலா இருக்கிறது?

Continue reading “புரட்டு”

எந்தத் தயக்கமுமில்லை !

karunanithi

03.06.1924 – 07.08.2018

ஊடுருவும் மொழியோசையை தமிழில் துய்ப்பதானால் கலைஞர் கருணாநிதியின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் இலக்கிய நயத்துக்கும் கட்டுண்டு போகிறேன்.

Continue reading “எந்தத் தயக்கமுமில்லை !”

வாசிப்பும் உரையாடலும் -17

01.07.2018 (சுவிஸ்)

// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//

36176870_1095311473956918_1272366941700358144_n

Continue reading “வாசிப்பும் உரையாடலும் -17”

ஆகுமா?

இலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடிமக்கள் பெயர்ந்து இலங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.

Continue reading “ஆகுமா?”

விதைப்பு

thuthukkudi

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.

Continue reading “விதைப்பு”

துயர ஓவியம்

புலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.

பிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.

*

புலிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறோம்.

பிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.

Continue reading “துயர ஓவியம்”

மெல்ல சொல்லிவிடு காற்றே !

புகலிட நாடுகளிலிருந்து விடுமுறை போலவொரு நினைப்புடனும், வாழ்ந்து திளைத்த மண் அதன் மனிதத் தொடர்புகள் என ஒரு கலப்பான அனுபவத்தை பெறும் அங்கலாய்ப்புடனும் இலட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை போய் வருகிறார்கள். மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான வாழ்வும், அந்தந்த நாட்டு சமூகங்களோடு தகவமையும் (integration) ஆற்றலின்மை மற்றும் காலநிலை தருகிற ஒருவித அந்நியத்தன்மையும் அவர்களுக்கு இவ்வாறான பயணத்தைத் தூண்டுகின்றன. அது புரிந்துகொள்ளப்படக்கூடியது.

Continue reading “மெல்ல சொல்லிவிடு காற்றே !”

அஞ்சலி !

AEManoharan
தமிழ் சிங்கள மொழிகளிலான ஈழத்து பொப் இசையின் எழுச்சி இளைஞர்களின் உளவியல் தளத்தினை மேடையாக்கியதில் வெற்றிகண்டது. எமது சமூகத்தின் -குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின்- கட்டுப்பெட்டித்தனமான வாழ்க்கை முறைகளால் துள்ளலான மனவியல்புகள் அடக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இளமையின் துடிதுடிப்புக்கும் வெளிப்படுத்தலுக்கும் எதிராக அது இருந்தது / இருக்கிறது. இந்த அமுக்கப்பட்ட துடிப்பான மனவியல்பை ஊடுருவி வெளிக்கொணர்ந்ததில் ஈழத்து பொப் இசைக்கு மறுக்கமுடியாத வரலாற்றுப் பாத்திரம் உண்டு.

Continue reading “அஞ்சலி !”

மாற்றுத்திறனாளிகள்

சொற்கள் நேரடி அர்த்தத்தை மட்டும் தருபனவல்ல. அது (வேண்டுமென்றே) சொல்லப்படாத அல்லது தவிர்த்துவிடுகிற அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சிலவேளைகளில் இந்த அர்த்தம் நேரடி அர்த்தத்தைக்கூட மறுதலிப்பதாக இருக்கவும் செய்யும்.
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லாடல் எதிர்மறையில் “அவர்கள் உடல் அல்லது உள ரீதியில் இயலாமையுடைவர்கள். அவர்களிடம் மிகுதியான மனித இயல்புகள் திறமைகள் கனவுகள் இருக்கின்றன என்ற பொருளைக்கூடச் சுட்டவில்லை.

Continue reading “மாற்றுத்திறனாளிகள்”

குயிலின் கானத்தை கேட்க முடியாது !

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புலிகளின் தலைவர் பிரபாகரனால் கொலைசெய்யப்பட்ட தினம் இன்று. தனது 36 வது வயதில், அவன் சித்ரா பதிப்பகத்தின் வாசலில் வைத்து மௌனமாக்கப்பட்டான். புதியபாதை பத்திரிகை அலுவலாக அச்சகத்தின் முன்புறம் அமர்ந்திருந்து வேலைசெய்துகொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்.

Continue reading “குயிலின் கானத்தை கேட்க முடியாது !”