முடிச்சுகள்

பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் 70 களில் முதலில் மைக்கல் கெலி என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்திலிருந்து ஆங்கில பாடம் படிப்பிக்க வந்திருந்தார். கொளுத்தும் வெயில் காலத்தில் அவர் கட்டைக் காற்சட்டையுடன் வந்தபோது கல்லூரி நிர்வாகம் அவரை அழைத்து நீளக்காற்சட்டை அணிந்து வருவதே கல்லூரியின் ‘டிசிப்பிளின்’ என்று சொல்ல, அவர் வீடு சென்று திரும்ப நீளக் காற்சட்டையுடன் வந்தார். எம்மைப்போல் அவரால் வெயிலை தாங்க முடியாததால் மிக அவதிப்பட்டார். கல்லூரி அசையவில்லை.

Continue reading “முடிச்சுகள்”

பிச்சைப் பாத்திரம்

கல்லூரியொன்றில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கணித ஆசிரியர் கேத்திரகணித தேற்றம் ஒன்றை நிறுவிக்காட்ட வகுப்பை ஏவினார். நான் சரியாகத்தான் நிறுவியிருந்தேன். ஆனால் வகுப்பின் முன்னால் நிற்கவைத்து பிரம்பால் தாக்கப்பட்டேன். “கேத்திரகணித புத்தகத்தில் ABC ஒரு முக்கோணம் என சொல்லி இத் தேற்றம் நிறுவப்பட்டிருக்கிறது. நீ XYZ ஒரு முக்கோணம் என போட்டு நிறுவியிருக்கிறாய். நீ எங்கையோ ரியூசனுக்குப் போகிறாய்” என்று அடித்தார். சிறிமாகால பஞ்சத்தில் இரண்டு வேளை கொஞ்சமாகச் சாப்பிடுவதே போராட்டமாயிருந்தபோது எங்கை ரியூசனுக்குப் போவதாம். இல்லை என்று மட்டும் சொன்னேன். அடியை வாங்கினேன். மாற்றி யோசிக்க நினைத்துப் பார்க்கக் கூடாதா என்ற உள்மனக் கேள்வியுடன் போய் அமர்ந்தேன்.

Continue reading “பிச்சைப் பாத்திரம்”

Vincent Van-Gogoh

கொலண்ட்டைச் சேர்ந்த வின்சன்ற் வான்கோ (1853-1890) ஒரு புகழ்பெற்ற post-impressionist ஓவியர். மேற்குலக ஓவிய வரலாற்றில் பாரிய தாக்கம் செலுத்தியவர்களில் அவரும் ஒருவர். ஒரு பத்து வருட காலத்தில் 2100 ஓவியங்களை அவர் வரைந்திருந்தார். இவைகளில் பெரும்பாலானவற்றை அவர் தனது வாழ்வின் கடைசி இரு வருடங்களில் வரைந்து தள்ளினார்.

Continue reading “Vincent Van-Gogoh”

மாற்றுத்திறனாளிகள் !

சொற்கள் நேரடி அர்த்தத்தை மட்டும் தருவனவல்ல. அது (வேண்டுமென்றே) சொல்லப்படாத அல்லது தவிர்த்துவிடுகிற அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சிலவேளைகளில் இந்த அர்த்தம் நேரடி அர்த்தத்தைக்கூட மறுதலிப்பதாக இருக்கவும் செய்யும்.

Continue reading “மாற்றுத்திறனாளிகள் !”

Pixel Forest Turicum

சுவிஸ் கலைஞை Pipilotti Rist அவர்கள் (1962) பிரபல சூரிச் நகர கலைக்கூடத்தில் ( Zurich Kunsthaus) தனது கலை வேலைப்பாடொன்றை காட்சிப்படுத்தியுள்ளார். நவீன தொழில்நுட்பங்களையும் (கணனி, LED விளக்குகள்), கணக்கிடல்களையும் பாவித்து மண்டபம் ஒன்றை வேறு உலகமாக சிருஸ்டித்துள்ளார். 3000 லெட் விளக்குகள் ‘பளிங்குச் சிற்பி’க்குள் ஒளிர தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

Continue reading “Pixel Forest Turicum”

நெருக்கடி

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவு இலங்கை. நாம் ரின் மீனை இறக்குமதி செய்கிறோம். நிலமும் நீர்வளமும் வெயிலும் மழையும் உள்ள இந்த நிலத்தில் காய்கறிகளுக்காக அழுகிறோம். வீட்டுத் தோட்டங்களும் பற்றை வளர்ந்து கிடக்க மோட்டார் சைக்கிளில் ஊர்சுற்றுகிறோம். சில நூறு மீற்றர் தொலைவிலுள்ள கடையில் ஒரு கிலோ வெங்காயம் வாங்க மோட்டார் சைக்கிளை கலைக்கிறோம். யாழ்ப்பாண வாழ்நிலை இது. புகலிடம் வடபகுதிக்குள் காவி வந்த பவுசு, சொகுசு கலாச்சாரம் இதில் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறது.

Continue reading “நெருக்கடி”

பிசாசுகள்

எந்த நாடாகிலும் ஆட்சிக்கான தலைவர்களை தீர்மானிப்பதில் எந்தப் பிசாசு நல்ல பிசாசு என மக்கள் முடிவுக்கு வந்து வாக்களிப்பதை இன்றைய ‘ஜனநாயகம்’ அமைத்துத் தந்திருக்கிறது. அது சாதாரண தேர்தல் தொகுதியிலும்கூட நல்ல பிசாசையே தீர்மானிக்குமளவுக்கு மக்களை இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியிருக்கிறது. ஜனநாயகத்தின் பெறுமதி அதுவாகியிருக்கிறது.

Continue reading “பிசாசுகள்”

வருவதாயில்லை!

எனது கல்வி தகைமையைக் கேட்கிறாய்,
கொடுப்புக்குள் சிரிக்கிறாய்.
என்னருகில் நின்று உயரத்தைப் பார்க்கிறாய்,
நீ உயரம் என்கிறாய்
மயிரற்றுப்போன எனது தலையைப் பார்த்து
உனது முடியை கோதிவிடுகிறாய்.

Continue reading “வருவதாயில்லை!”

பனி பொழிந்த நிலம்

வெண்முகில்களை சீவி
துருவலாய்க் கொட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
இலைகள் சருகுகளாய் உதிர்ந்து கொட்டியிருந்தபோது
மரங்கள் தமது அர்த்தத்தை இழந்திருந்தன – அப்போ
எனது கமராவை நான் உறைக்குள் புதைத்திருந்தேன்.
இப்போ உறைக்குள்ளிருந்து உருவி எடுத்தேன்.

Continue reading “பனி பொழிந்த நிலம்”

புகலிட இலக்கிய யதார்த்தம்

மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலித்தோம்.

Continue reading “புகலிட இலக்கிய யதார்த்தம்”