அரசியல் மயப்படலும் மயப்படுத்தலும்.

அரசியல் மயப்படுத்தப்படுவதைப் பற்றி பேசும்போது அரசியல்மயப்படல் என்பதை ஓரங்கட்டாமல் இருப்பது முக்கியமானது. வாழ்நிலை உணர்வுகளைத் தீர்மானிக்கிறது என்பதை அரசியல்வெளிக்கு அப்பால் வைத்து வரைவுசெய்ய முடியாது. இந்த 30 வருட யுத்தம் உருவாக்கிய புறச்சூழல் மக்களிடம் உண்டாக்கிய உணர்வலைகள் என்ன? தமது இருத்தலை பாதிக்கும் விசயங்களில் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் இயன்றளவு காட்டிவரும் எதிர்ப்பு அரசியல்மயப்படலன்றி வேறென்ன?

Continue reading “அரசியல் மயப்படலும் மயப்படுத்தலும்.”

பேய்த்தோப்புக்குள் விளக்கு !

1984 கடைசிப் பகுதி.

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரந்தராயன்குடிக்காடு கிராமம்.

கழக கமாண்டோப் பிரிவினருக்கான தொலைத்தொடர்பு முகாம்.

“பெரிய ஐயா” வருகிறார், உளவுப்படை தளபதி சங்கிலியின் பாதுகாப்புடன்.

 பெரிய ஐயா வெள்ளை வேட்டியுடன் சிவப்புநிற ரீசேர்ட் உடன் இப்போதெல்லாம் பஸ்ஸில் வந்து இறங்குவதில்லை. அவருடன் சந்ததியாரையும் காண்பதில்லை.

மோட்டார் சைக்கிள் சவாரி. கமாண்டோ யூனிபோர்ம். முன்னுக்கும் பின்னுக்கும் இன்னும் ஒருசில மோட்டார் சைக்கிள் உறுமல். ஜீப் வேறை.

Continue reading “பேய்த்தோப்புக்குள் விளக்கு !”

யாழ்நூல் நிலைய நினைவுகூரல் !

33 வருடங்கள் கடந்துவிட்டது. யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டது வரலாற்றின் மிகப் பெரும் பண்பாட்டுக் கொலை. இது ஓர் இனத்தின் அறிவுத் தளத்தின் முதகெலும்பை முறிக்கும் சதி. அதனால் அது இனப்படுகொலையின் ஒரு அங்கம்.

வசதியற்றவர்களுக்கும் அது ஒரு அறிவுப்பிரசாதமாக இருந்து கைகொடுத்திருக்கிறது. அது தலித்துகள் உட்பட விளிம்புநிலை மாந்தரையும் சென்றடைந்தது. தெற்காசியாவிலேயே மிகப்பெரும் நூல்நிலையமாக அது வளர்ந்த கதையின் பின்னால் இருந்த உழைப்புகள் அர்ப்பணிப்புகள் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.

Continue reading “யாழ்நூல் நிலைய நினைவுகூரல் !”

ஒரு நட்புக் குறிப்பு

 

மந்திகை என்றால் பலருக்கும் “விசர் ஆஸ்பத்திரி” என்றவாறுதான் முதலில் கிளிக் பண்ணும். நமட்டாய் சிரிப்பும் வரும்.  அப்போதெல்லாம் நான் ஒரு பதில் வைத்திருந்தேன். கார் உள்ள இடத்தில்தான் கராஜ் இருக்கும்.. மூளை உள்ள இடத்தில்தான் அதுக்கான ஆஸ்பத்திரி இருக்கும் என.

 உண்மையில் அது “விசர் ஆஸ்பத்திரி“ அல்ல. பொது மருத்துவமனை. பைத்தியத்தை குணமாக்கும் முயற்சியில் தனது அறிவெல்லைக்குள் செயற்பட்ட பகுதியையும் உள்ளடக்கிய மருத்துவமனை. குழந்தைப் பேறு மருத்துவமனையும்கூட. அதன் சேவை குறைபாடுகளையும் கடந்து எப்போதுமே உயர்ந்துதான் நிற்கும். அதிலும் மனநோய்க்கான வைத்தியர்களின் சேவை எப்போதும் அர்ப்பணிப்பு நிறைந்ததாகவே எனது காலத்தில் நினைவுகூர்கிறேன்.

Continue reading “ஒரு நட்புக் குறிப்பு”

இடது வளைவு..!!

நீண்டகாலமாகவே மக்கள் சார்ந்து நியாயமாக குரல் எழுப்பி வந்தவர் வாசுதேவ நாணயக்கார. கவனிப்புப் பெற்ற இடதுசாரியாக வாழ்ந்தவர். மகிந்தவின் நண்பரான அவர் அரசுக்குள் உள்ளிழுக்கப்பட்ட காலத்திலிருந்து அவரது குரல்கள் அவஸ்தைப்பட ஆரம்பித்தன.

Continue reading “இடது வளைவு..!!”

இது ஏன் முடியாதாம்!

தமிழ் பேசும் மக்களின் எல்லாப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தாத (எல்லா இயக்கங்களினதும்) போராட்டத்தை தமிழ் மக்களின் போராட்டம் என்றுதான் அழைத்தோம். தமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தாத கிரிக்கெட் அணியினை இலங்கை அணி என்று அழைக்கிறோம்.

 நான் ஓர் இலங்கைப் பிரசை… அது சிங்கள மக்களினது மட்டுமல்ல, தமிழ்மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் மலையக மக்களினதும் நாடு. அந்த உரிமையை நாம்விட்டுக்கொடுக்க முடியுமா என்ன.

Continue reading “இது ஏன் முடியாதாம்!”

இராணுவப் பயிற்சி வக்கிரம்

பாடசாலை முடிந்து பிள்ளை பரீட்சை பெறுபேறுடன் வீட்டுக்கு வருகிறது. அது தன்னளவில் திருப்பதியடைந்தோ அல்லது திருப்திப்படாமலோ வருகிறது. அதைவிட அக் குழந்தையிடம் தனது பெற்றோரின் அலசல் முறையில் பயம் மேலிடுகிறது. பக்கத்துவீட்டு சக மாணவர்களின் புள்ளிகளை விசாரித்து தனது குழந்தையின் திறமை அல்லது திறமையின்மைமீது தீர்ப்பு வழங்கும் மனோபாவம்தான் அது.

Continue reading “இராணுவப் பயிற்சி வக்கிரம்”

தூவானம்

08 மார்ச்2014. அது கிரிக்கற் பொழுதாய்ப் போனது எனக்கு. “ஏசியன் கப்” க்கான இறுதி ஆட்டம் சிறீலங்கா அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடம்பெற்றது. நாள் முழுதும் அதை கணனியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.கிரிக்கெற் எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த விளையாட்டு என்பதால் அதை சும்மா பார்க்க வெளிக்கிட்டு, பின் இடையில் நிறுத்த முடியாமல் இறுதிவரை பார்த்து முடித்தேன்.

Continue reading “தூவானம்”

மார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.

கால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் நிலவும் நாடுகள் இவை. மற்றைய விளையாட்டுகள் போலவே ஆண்களும் விளையாடுகிறார்கள். பெண்களும் விளையாடுகிறார்கள். ஆங்கிலத்தில் Team என்பதை டொச்சில் Mannschaft என்பார்கள். Mann என்பது ஆண். இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.

 வீதியை குறுக்காய்க் கடக்கும் மஞ்சள் வரிக் கோட்டுப் பாதைக்கு ஆங்கிலத்தில் Zebra-cross என்பார்கள். அதை டொச்சில் Fussgängerstrifen என்பார்கள். Fussgänger என்பது ஆண்பால் சொல்.(Fussgängerin என்பது  பெண்பால் சொல்). இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.

Continue reading “மார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.”

றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

24 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஓர் ஆளுமை றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

 

“…ஏப்ரல் 23, 1990 ரைம் சஞ்சிகையில் வெளிவந்த இக் கட்டுரை சுவிஸ் மனிதம் இதழ்-6 இல் (1990 யூலை , ஓகஸ்ட்) தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இக் கட்டுரை வெளிவந்த ரைம் சஞ்சிகை இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டது…”