சொல்லத் தோன்றியது !

30 வருட கால ஆயுதப் போராட்டம், போர் என களேபரப்பட்ட ஒரு பூமியில் போரை புரட்டிப் போடுகிற போரிலக்கியமும் இல்லை. தத்துவ வளர்ச்சியும் இல்லை. சர்வதேச அளவில் அறியப்பட்ட விமர்சகர்களுமில்லை. சிந்திக்கத் தூண்டுகிற ஆய்வாளர்களுமில்லை.

Continue reading “சொல்லத் தோன்றியது !”

மரபின் காதலர்கள்

காதலா? கத்தரிக்காயா?

 

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

Continue reading “மரபின் காதலர்கள்”

கவண்

ஒரு (மேற்குலக) அகதியின் மனநிலையை புரிந்துகொள்வதற்கு அகதியாக இருந்தால்தான் சாத்தியமா என எண்ணத்தோன்றுகிறது. அகதிவாழ்வை ஒரு வெறும் இடப்பெயர்வாக (அல்லது ஒரு பயணமாக) மட்டும் நோக்குகிற எளிமையான போக்கு சமூக ஆய்வாளர்களாக இருக்கிற தகுதியை ஒருவருக்கு இல்லாமலாக்கிவிடக் கூடியது.

Continue reading “கவண்”

வெட்கப்படுகிறோம் !

காதலர்கள் மிக இயல்பாக வீதிகளிலோ புகைவண்டியிலோ அதன் நிலையங்களிலோ கட்டியணைத்து முத்தமிடுவது இங்கு ஒரு சாதாரணமான நிகழ்வு. ஆரம்ப காலங்களில் அதை தமிழர்கள் “நொங்கு குடிக்கிறாங்கள்” என விழிப்பர். முத்தமிடுபவர்களைப் பார்த்து தாம் வெட்கப்படுவர். அந்த வெட்கத்துக்குள் காமம் ஒளிந்திருக்கும். ஒளித்துவைக்கப்படுகிற காமம் வக்கிரமாக கசிகிறதோ என எண்ணத் தோன்றுமளவுக்கு யோசிக்க வைக்கிறது.

சப்ளினின் உலகம்

DSC00286
சுமார் 20 வருடங்களுக்கு முன் எஸ்.வி ராஜதுரை சுவிசுக்கு வந்திருந்தபோது சார்ளி சப்ளின் வாழ்ந்த வீட்டை நோக்கிய (300 கி.மீ) பயணத்தை மேற்கொண்டோம். அந்த வீடு மிக உயரமான மதிலுக்கு பின்னால் மறைந்திருந்தது. பெரும் மரங்கள் ஏதோவொன்றை பொத்திவைத்திருப்பது மட்டுமே தெரிந்தது. உள்ளே போக முடியாது. எதையும் பார்க்க முடியாது. வீடாகவே அது இருந்தது. எஸ்விஆருக்கு அது பொருட்டாக இல்லை. சார்ளி சப்ளின் நடந்த இந்த வீதியில் நானும் நடக்கவேணும் என்றபடி அங்குமிங்குமாக ஒருவித ஆகர்சிப்புடன் நடந்தார். அதை இப்போ அவர் பார்க்க நேர்ந்தால் ஒருவேளை சப்ளின் வாழ்ந்த அந்த வளவினுள் உருண்டுபுரளவும் கூடும்.
இருபதாம் நூற்றாண்டின் இந்த மாபெரும் மக்கள் கலைஞன் நம்மில் பலரையும் இவ்வாறேஆதர்சித்து நிற்கிறான்.

Continue reading “சப்ளினின் உலகம்”

மாவீரர் பிம்பம்

இப்போதான் எனது நண்பர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு வந்தேன். «மாவீரர் தினத்துக்கு போகயில்லையா» என கேட்டேன்.

அதற்கு காரணம் உள்ளது. அவர் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்தவர். இப்போ சுவிசில் குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
«நான் போகவில்லை. மாவீரர்களின் பெயரிலை வியாபாரம்தான் நடத்துறாங்கள். அங்கை எத்தினை சனம் கஸ்ரப்படுகுது. போராளிகள் படுற பாடு. பார்த்தியோ தமிழினியின்ரை அம்மா நல்லூர்க் கோயிலிலை கடலை வித்து சீவிச்சதை..» என்று தொடர்ந்து கொண்டிருந்தார்.

சுடர்கதை

hand-over-candle-1495809
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
உனது முகத்தை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
புறம்காட்டி நீ செல்கிறபோது அணிகிற முகமூடியை
நான் கண்டுகொண்டுவிடக் கூடாது என
எச்சரிக்கையுடன் இருக்கிறாய்.
தெரிகிறது.

Continue reading “சுடர்கதை”

நான் ஒரு சிறைப்பறவை – Phan Boi Chau

(பான் பாய் சௌ அவர்களின் சிறைக் குறிப்புகள்)

// எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். // – Phan Boi Chau

Continue reading “நான் ஒரு சிறைப்பறவை – Phan Boi Chau”

நடிகர் சிம்புவின் “பீப்” பாடல் விவகாரம்

கெட்ட வார்த்தைகள்.
 (12 DECEMBER 2015)

சிம்புவின் பீப் பாடல் அவர்கள் எதிர்பார்த்தபடியே சர்ச்சையை பரிசளித்திருக்கும். அது அவர்களது பிம்பத்துக்கு தேவையானது. அது இருந்துவிட்டுப் போகட்டும்.
கெட்ட வார்த்தைகள் என்பதும் (தூசிக்கும்) தூசண வார்த்தை என்பதும் ஒன்றுதான் என நினைக்கிறேன். டொச் மொழியில் கடவுளை நிந்தனைசெய்வதான வார்த்தை, மலத்தோடு சம்பந்தப்படுத்தி ஊத்தையின் மீதான அருவருப்புத்தன்மையை பொருள்படுத்துகிற வார்த்தை என்பன கெட்ட வார்த்தைகளாக இருக்கிறன்றன. மலத் துவாரத்தை சுட்டும் வார்த்தையும் அதை குறியீடாக்குகிற நடுவிரலை நீட்டிக் காட்டும் சைகையும் அதிகபட்ச கெட்ட வார்த்தையாக இருக்கிறது. இதேபோல் நிறவெறியை சுட்டுகிற வார்த்தைப் பிரயோகங்களும் கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. (நானறிந்தளவு இதுதான். இன்னமும் இருக்கலாம்.)

Continue reading “நடிகர் சிம்புவின் “பீப்” பாடல் விவகாரம்”

இதுவுமோர் உலகு !

உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என
குரலெழுகிற இதே உலகில்தான்
“மன்னித்துவிடு” என்று வேறு கேட்க வேண்டியுமிருக்கிறது.
அவலம்தானெனினும் கேட்டுக்கொள்வோம்
அதிகாரம் படைத்த சீமான்கள்
நவீன உலகில் வீற்றிருந்தபடி
ஆதியுலகத் தண்டனைகளை ஏவுகின்றனர்
அடிமைப்பட்டவர்கள்மேல்.

Continue reading “இதுவுமோர் உலகு !”