கக்கூஸ்

 

ஓர் ஆவணப்படம்.

 

kakkoos-2

சுவிஸ் சூரிச் இல் “வாசிப்பும் உரையாடலும்” என்ற தொடர் சந்திப்பு கடந்த இரு வருடகாலமாக நிகழ்த்தப்படுகிறது. நூல்களை (முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்களை) வாசித்து பின் உரையாடுவது என முதிய இளைய சந்ததிகள் இணைந்து பயணிக்கிற பாதை இது. இதன் இணைப்பாக “திரையிடலும் உரையாடலும்” இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது. 07.05.2017 அன்று நடந்த இரண்டாவது திரையிடல் உரையாடலில் கக்கூஸ் ஆவணப் படமும் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

Continue reading “கக்கூஸ்”

சாதியப் போராட்டம்

– வெகுஜன அமைப்புகளும் முன்னுதாரணமும்.

 

(12.03.17 அன்று சுவிஸ் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் நான் வைத்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டது.)

 

caste-pic

வெகுஜன அமைப்புகள் ஒரு சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து தோன்றுகிறது. தனக்கான சுயத்தை உடையதாகவும் சுதந்திரமான இயக்கத்தை வேண்டிநிற்பதாகவும் குறித்த எல்லைகளுக்குள் தமது இலக்கை நிர்ணயிப்பதாகவும் இருக்கும். அது தொடர்ந்து செயற்படுவதோ, கலைந்போவதோ அதன் இலக்கைப் பொறுத்தது.

இலங்கையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை விடவும் ஒரு முன்னுதாரணமான போராட்ட வடிவமாகும். மக்கள் போராட்டங்களில் வெகுஜன அமைப்புகளின் பாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டுமெனில் அது இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் முடியும்.

Continue reading “சாதியப் போராட்டம்”

சப்ளினின் உலகம்

DSC00286
சுமார் 20 வருடங்களுக்கு முன் எஸ்.வி ராஜதுரை சுவிசுக்கு வந்திருந்தபோது சார்ளி சப்ளின் வாழ்ந்த வீட்டை நோக்கிய (300 கி.மீ) பயணத்தை மேற்கொண்டோம். அந்த வீடு மிக உயரமான மதிலுக்கு பின்னால் மறைந்திருந்தது. பெரும் மரங்கள் ஏதோவொன்றை பொத்திவைத்திருப்பது மட்டுமே தெரிந்தது. உள்ளே போக முடியாது. எதையும் பார்க்க முடியாது. வீடாகவே அது இருந்தது. எஸ்விஆருக்கு அது பொருட்டாக இல்லை. சார்ளி சப்ளின் நடந்த இந்த வீதியில் நானும் நடக்கவேணும் என்றபடி அங்குமிங்குமாக ஒருவித ஆகர்சிப்புடன் நடந்தார். அதை இப்போ அவர் பார்க்க நேர்ந்தால் ஒருவேளை சப்ளின் வாழ்ந்த அந்த வளவினுள் உருண்டுபுரளவும் கூடும்.
இருபதாம் நூற்றாண்டின் இந்த மாபெரும் மக்கள் கலைஞன் நம்மில் பலரையும் இவ்வாறேஆதர்சித்து நிற்கிறான்.

Continue reading “சப்ளினின் உலகம்”

குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்

ali-young and old

கிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது  Pugilism என அழைக்கப்பட்டது.

ஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.

Continue reading “குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்”

நடிகர் சிம்புவின் “பீப்” பாடல் விவகாரம்

கெட்ட வார்த்தைகள்.
 (12 DECEMBER 2015)

சிம்புவின் பீப் பாடல் அவர்கள் எதிர்பார்த்தபடியே சர்ச்சையை பரிசளித்திருக்கும். அது அவர்களது பிம்பத்துக்கு தேவையானது. அது இருந்துவிட்டுப் போகட்டும்.
கெட்ட வார்த்தைகள் என்பதும் (தூசிக்கும்) தூசண வார்த்தை என்பதும் ஒன்றுதான் என நினைக்கிறேன். டொச் மொழியில் கடவுளை நிந்தனைசெய்வதான வார்த்தை, மலத்தோடு சம்பந்தப்படுத்தி ஊத்தையின் மீதான அருவருப்புத்தன்மையை பொருள்படுத்துகிற வார்த்தை என்பன கெட்ட வார்த்தைகளாக இருக்கிறன்றன. மலத் துவாரத்தை சுட்டும் வார்த்தையும் அதை குறியீடாக்குகிற நடுவிரலை நீட்டிக் காட்டும் சைகையும் அதிகபட்ச கெட்ட வார்த்தையாக இருக்கிறது. இதேபோல் நிறவெறியை சுட்டுகிற வார்த்தைப் பிரயோகங்களும் கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. (நானறிந்தளவு இதுதான். இன்னமும் இருக்கலாம்.)

Continue reading “நடிகர் சிம்புவின் “பீப்” பாடல் விவகாரம்”

பனி

நாவல்தானே ஓர் ஓட்டமும் நடையுமாக கடைசிப் பக்கத்தை எட்டிப் பிடித்துவிடலாம் என்ற எனது எதிர்பார்ப்பைப் பார்த்து ஓரான் பாமுக் புன்னகைத்திருத்தல் கூடும். ஒருவேளை அதற்கும் ஒரு படிமத்தையும் பனிச் செதிலிலிருந்து உருவி எடுத்துக் காட்டியுமிருப்பார் அந்த மனுசன். பனியை எத்தனைவகையான குறியீடாக, படிமமாக பொரித்துக் காட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.

Continue reading “பனி”

ஒரு கால்நூற்றாண்டு அவலம்.

சுவிசிலிருந்து 5 ஆண்டுகளாக வெளிவந்த (மொத்தம் 30 இதழ்கள்) “மனிதம்“ சஞ்சிகையின் எட்டாவது இதழில் (nov-dec 1990) எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தின் முக்கிய பகுதி இது. புகலிட சஞ்சிகைகள் பலவும் இதுகுறித்து அப்போ புலிகளின் கெடுபிடியையும் தாண்டி குரல்கொடுத்திருந்தன. விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டு, புத்தளத்தில் இன்றும் அகதிகளாக கழித்துக்கொண்டிருக்கும் காலம் ஒரு கால் நூற்றாண்டை எட்டியிருக்கிறது. அதனை நினைவுபடுத்தும் முகமாக இங்கு தரப்படுகிறது.

Continue reading “ஒரு கால்நூற்றாண்டு அவலம்.”

அபத்தம்

வித்தியாவின் பாலியல் சித்திரவதைக் கொலை தொடர்பாக எதிர்பாராத அளவில் வடக்கு கிழக்கிலும் புத்தளம் போன்ற பிரதேசங்களிலும் ஓர் எதிர்ப்புப் போராட்டம் வெளிக்கிளம்பியுள்ளது. மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்குள் மெல்ல மெல்ல ஆழப்புதைந்த ஒரு சமூகம் மெல்லத் தலையெடுத்து வாழ்வியல் வெளிகளில் சமூக மனத்துடன் உலவத் தொடங்கியிருக்கிறது. தனது தொலைந்துபோன விழுமியங்கள் மீதான பச்சாதாபம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வன்முறைக்குள் அடக்கிவைக்கப்பட்ட அதன் மனித உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தப்படுவது இயல்பு. தனிமனித உளவியலானாலும் சமூக உளவியலானாலும் அதேதான் நிலைமை.

இங்கு வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுஞ்செயலைக் கண்டித்து அது எழுந்திருக்கிறது. தனிமனித உளவியலின் தொகுப்பான சமூக உளவியல் வெளிப்பாடு இது. இதை வித்தியா என்ற தனிநபருக்கான போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது இழந்துபோன விழுமியங்களை மீளுருவாக்கம் செய்ய ஏங்கும் சமூக மனங்களின் போராட்டமாக வரையறுக்க முடியும்.

Continue reading “அபத்தம்”

பிறழ்வு

முதலில் வித்தியாவுக்கு எனது கனத்த அஞ்சலிகள்.

வித்தியாவின் இழப்பின் மீதான தார்மீக கோபங்களிலிருந்து பிறழ்ந்து விழும் சொற்கள் இக் குறிப்பை எழுதத் தூண்டியது.

மாணவி வித்தியாவை கொன்றொழித்த குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பெண்ணுடலின் மீதான மலின அரசியலை நடத்தி காசு பொறுக்கும் குறுக்குவழியில் ஈடுபடாமல் குற்றவாளிகளை அம்லப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இவையிரண்டுக்குமான போராட்டங்கள், அழுத்தங்கள் எழுவது ஓரளவாவது பயன்தரும்.

Continue reading “பிறழ்வு”