கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு.
Continue reading “சுவிஸ் தொலைக்காட்சியில் ‘துவாரகா’”Author: sudumanal
பாதங்களை வைக்குமா?
உக்ரைன் மீதான ரசியப் போரில் புட்டின் மீது போர்க்குற்ற விசாரணைக்கான பிடிவிறாந்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அறிவித்தபோது அது “நீதியான தீர்ப்பு” என வரவேற்ற அமெரிக்கா, இப்போ நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் இருவருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்காக அதே நீதிமன்றம் பிடிவிறாந்தை அறிவித்தபோது அந்தத் தீர்ப்பை “அநீதியானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என அறிவிக்கிறது. இவர்களோடு சேர்த்து மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து அறிவித்துள்ளது.
Continue reading “பாதங்களை வைக்குமா?”எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?
ஹவார்ட் !
எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?
24.05.24 அன்று ஹவார்ட் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஸ்ருதி குமார் ஆற்றிய உரை பலரையும் கட்டிப் போட்டது. மிகத் தெளிவாக தனது உரையை, தான் கொணர்ந்த குறிப்புக்கு வெளியேயும் போய் முன்வைத்தார்.
Continue reading “எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?”பறத்தலும் ஊர்தலும்
வீட்டு பல்கனியை எட்டிப்பார்க்கும் மரக்கிளையில் சிட்டுக் குருவிகளுக்கான தீனை ஒரு சிறு மரவீடு செய்து அதற்குள் இடுவது எனது வழமையாக இருந்தது. பனிப்பொழிவில் அது உணவுதேடி அந்தரப்படுவதை காண சகிக்கவில்லை. அதிலிருந்து அந்த சிறுவீட்டில் தீன்தானம் தொடங்கியது. படபடக்கும் சிற்றிறகையும் அதன் சிறு அலகின் இசையசைவையும் எனது ரசிகன் பார்த்துக்கொண்டு இருப்பான். இப்படியே ஒரு வெயில்கால பருவத்திலும் நான் தொடர்ந்து செய்ததைக் கண்ட அயலவன் “இப் பருவ காலத்தில் பறவைகள் சுயமாக உணவுதேடக்கூடியன. அதற்கான அதனது உழைப்பை இல்லாமலாக்கி சோம்பேறிகளாக்கிவிடாதே” என சொன்னான். உறைத்தது. இயற்கை மீதான இன்னொரு புரிதலாக அது இருந்தது. ஒரு வாழ்க்கைப் பாடமாகவும் இருந்தது.
Continue reading “பறத்தலும் ஊர்தலும்”ஆதரிப்போம் !
கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐநா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.
Continue reading “ஆதரிப்போம் !”தடங்களில் அலைதல்
நூல் அறிமுகம்
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.
என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.
Continue reading “தடங்களில் அலைதல்”முற்றவெளி மந்திரம்
யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது.
சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணுகி எழுதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது முக்கியமானது என நம்புகிறேன்.
Continue reading “முற்றவெளி மந்திரம்”செங்கடல் தீ
ஏடன் வளைகுடாவும் மத்திய கிழக்கின் செங்கடல் பகுதியும் இணையும் எல்லை 32 கி.மீ அகலத்தைக் கொண்ட மிக ஒடுங்கிய பகுதியாக அமைந்தள்ளது. இது சுயஸ் கால்வாய்க்கு செல்லும் பாதையும் ஆகும். இந்த ஒடுங்கிய முனைவாயிலை யேமன் நாடு முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பாதைவழி உலக உணவுத் தேவையின் 60 வீதம் கப்பல் போக்குவரத்தினூடாக நடைபெறுகிறது. அதைவிட மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள் கொள்ளளவை தாங்கிச் செல்லும் கப்பல்களும் இதனூடாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது. அத்தோடு ஆசியாவையும ஐரோப்பாவையும் இணைக்கும் கடல்வழிப் போக்குவரத்து இதனூடாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணங்களால் உலகப் பொருளாதாரத்தின் இரத்தோட்டமாக இந்த கடல்வழி அமைந்திருக்கிறது என விபரிக்கப்படுகிறது.
Continue reading “செங்கடல் தீ”மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!
யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் நடந்த திரைப்பட விழாவொன்றுக்கு ஒருவர் அரைக் காற்சட்டையோடு போக அனுமதிக்கப்படாத விவகாரம் சமூகவலைத் தளங்களில் பெரும் பேசு பொருளாக வலம்வந்து கொண்டிருக்கிறது. இச் சம்பவம் குறித்து கருத்துச் சொல்ல நான் முனையவில்லை. இந்த சம்பவம் எதை வெளிப்படுத்துகிறது என்று பார்க்க முயல்கிறேன்.
Continue reading “மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!”மாவீரர் தினம்
2023

P. Duvaraga & AI Duvaraga
விமர்சனம் என்பது வரலாற்றை மறுத்தல் அல்ல. வரலாற்றின் மீது நின்று பேசுதல் ஆகும். தமிழீழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களுக்கு ஒரு வரலாறு இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு ஒரு நீள் வரலாறு இருந்தது. அதற்குள்ளும் ஒரு வரலாறு உள்ளோட்டமாய் இருந்தது. மண்ணுக்காக மடிந்தோர் எல்லோரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்தான். மரணித்த போராளிகளின் உறவினர்கள் இந்த மாவீரர் நாளில் விடும் கண்ணீர் ஆத்மார்த்தமானது என்பதும் உண்மை. அதை வைத்து ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை சென்ரிமென்ராக எழுத முடியாது. அதில் பிரயோசனம் இல்லை.
Continue reading “மாவீரர் தினம்”





