நம்பிக்கை என்பது தர்க்க விஞ்ஞானத்துக்கு உட்பட்டதாக வளர்ந்து கொள்கிறபோது அது யதார்த்தமாகப் பரிணமிக்கிற சாத்தியப்பாடுகளை கொண்டிருக்கும். இல்லாதபோது அது மத நம்பிக்கை போன்று உளத்துள் உலாவுகிற அல்லது உளத்துக்கு அமைதி தருகிற நம்பிக்கையாக தேங்கிவிடும்.
Continue reading “நம்பிக்கை”Author: sudumanal
எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு
கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.
Continue reading “எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு”அலைகளின் நடுவே
இலங்கை அரசியல்
ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும்.
Continue reading “அலைகளின் நடுவே”The ‘Poorest’ President
Jose Mujica
ஒரு நல்ல தலைவர் என்பவர் தனது காலத்தில் நல்லனவற்றை செய்வது மட்டுமல்ல, தனக்குப் பின்னரான காலத்தில் தன்னைவிட சிறந்த மக்களை உருவாக்கி விடவும் வேண்டும்.
அரசியல் என்பது தொழிலல்ல. அது ஒரு வாழ்முறை. போராடவேண்டிய தேவை ஏற்படுகிறபோது, சிலவேளைகளில் புரட்சி என்பது தனது சொந்த பிள்ளையைக்கூட தின்று செரிக்கும்.
Continue reading “The ‘Poorest’ President”ஓர் அரச தலைவர் என்பவர் நாட்டை நிர்வகிக்கும் உயர் நிர்வாக உத்தியோகத்தராக மக்களால் தேர்வுசெய்யப்படுபவர். அவர் ஓர் அரசனல்ல, கடவுளும் அல்ல. அவர் ஒரு பழங்குடி சூனிய வைத்தியருமல்ல. அவர் ஒரு மக்கள் சேவகர். அவர் நாட்டுக்காக செயற்படுவது தியாகமல்ல. கடமை!
வருக!
வருக!
தற்போதைய ஜேவிபியை ஒரு கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ற், சோசலிஸ்ட் கட்சி என்றெல்லாம் விளிப்பது அதீதம். ஜேவிபியின் சிற்பியான தோழர் ரோகண விஜயவீரா கால அடிச்சுவட்டிலிலிருந்து இந்தச் சிவப்பு நிறம் தொற்றிக் கொண்டதால், இப்போதும் அப்படி சுட்ட பலரும் தயங்கவில்லை. அது அபத்தம் நிறைந்தது. எனவே (அல்ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் சுட்டுகிற) அநுர ஒரு மார்க்ஸியத் தலைவர் என்ற லேபலில் மகிழ்ச்சி இல்லை. மார்க்ஸியத்தை அது கொச்சைப்படுத்துவதாகும்.
Continue reading “வருக!”அநுர அலை
2024 ஜனாதிபதித் தேர்தல்
ஊடகங்கள் -முக்கியமாக சமூகவலைத் தளங்கள்- உருவாக்கிக் காட்டுகிற அநுர அலை இலங்கையின் யதார்த்த அரசியல் நிலைமையை பிரதிபலிக்கிறதா என தெரியவில்லை. இருந்தபோதும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இம்முறை இந்தளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு “அரகல” 2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் அரசியல் விளைவுதான் முக்கிய காரணமேயொழிய, கடந்த அரசாங்கங்களின் ஊழல் இலஞ்சம், ஏமாற்றுகள் அல்ல. இந்தச் சேற்றில் உழலும் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் அரசியல்வாதிகளும் ஜனநாயக முகமூடியை அணிந்து நடனமாடுவது ஒன்றும் புதிதல்ல.
Continue reading “அநுர அலை”வாழை
திரைப் பார்வை
பொதுவாக பல திரைப்படங்கள் ஒரு முடிவை பரிசளித்து இருக்கையிலிருக்கும் எம்மிடம் தந்து அனுப்பிவைக்கும். சிந்தனையில் இடையீடு இன்றி எழுந்து சென்று விடுவோம். அநாதரவாக எழுத்தோட்டம் திரையில் நகரும் வால்போல அசைந்துகொண்டிருக்கும். வாழை திரைப்படம் முடிந்தும் பார்வையாளர்கள் எழுந்தபாடில்லை. வாழையின் கனதியும் படத் தொகுப்பும் இருக்கையோடு கட்டிப் போட்டுவிட்டிருந்தது. இசை மூளையறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சிப்புலத்துள் யாரோ கலவரப்பட்டபடி ஓடித்திரிந்தார்கள்.
Continue reading “வாழை”ஓகஸ்ட்-1
ஓகஸ்ட்-1 சுவிற்சர்லாந்தின் தேசிய தினம். சுவிஸின் 4 மொழிகளிலும் தேசிய கீதம் ஒலிக்கிறது. அந்தந்த கன்ரோன்களில் (மாநிலங்களில்) பெரும்பான்மையினரால் பேசப்படுகிற மொழி பாடசாலையில், நிர்வாக அலுவல்களில், வீதிப் போக்குவரத்து அறிவிப்புகளில் என எல்லாவற்றிலும் முதன் மொழியாக இருக்கிறது. எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் முறைமையிலான, தனிநபர் ஆட்சியதிகார முறைமையில்லாத 7 பேர் கொண்ட உயர் ஆட்சியதிகார அமைப்பும் தேசியப் பாராளுமன்றமும் கன்ரோன் பாராளுமன்றங்களும் என அதிகாரப் பரவலாக்க கட்டமைப்புக் கொண்டு நாடு இயங்குகிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க முன்மொழியப்படக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு கொண்ட இந்த நாட்டில் அகதிகளாக ஈழத் தமிழர்கள் வந்தடைந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது.
Continue reading “ஓகஸ்ட்-1”“மலையகா” நூல் அறிமுகம்
சூரிச் சந்திப்பு

30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் சூரிச் இல் 14:30 மணி தொடங்கி 18:00 மணிவரை ஓர் ஆர்வமூட்டும் சந்திப்பாக நடந்து முடிந்தது. 70 களில் தொடங்கி 2015 வரையான காலப் பகுதியில் 23 மலையகப் பெண்களால்/ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 42 கதைகளை கொண்ட இத் தொகுப்பு நூல் “ஊடறு” வெளியீடாக வந்திருந்தது. மலையகம்-200 நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் இணைத்துக் கொண்ட இத் தொகுப்புக் குறித்தான சந்திப்பாக நேற்றைய சந்திப்பு அமைந்தது.
Continue reading ““மலையகா” நூல் அறிமுகம்”இயல்பு
எனது இதயத்தில் உயிரின் இழை இருக்கிறது என்கிறான்
ஒருவன்.
இரத்தக் குழாய் நதியின் ஓட்டத்தில்
உயிரின் படகு பயணிக்கிறது என்கிறான்
இன்னொருவன்.
இரண்டும் ஒன்றுதான் என்கிறாள் ஒருவள்.
எனது மனதின் சிறகு ஒடுங்கினால்
உடல் ஒரு சடப்பொருள் ஆகிவிடுகிறது.
அந்த வரண்ட உடலில் இதயம் இயங்கியென்ன
குருதிநதி குதித்து விழுந்து பாய்ந்தென்ன
மனதின் இறகில் அதன் பறப்பில்
கிறங்கும் என் வாழ்வை
உடல் காவுவதுவரை காவட்டும்.
வாழ்வின் மரணம் வானவில்லின்
நிறங்களாய் விரியும்
நினைவுகளை எழுதும்.
காலம் அதை மெல்ல மெல்ல
கலைந்தழிக்கும் நுண்கலையை அறியும்.
எல்லாம் காணாமல் போகும்.
புதிய புதிய வானவில்கள் தோன்றும்
இப் பிரபஞ்சத்தில்
காலம் பயணித்தபடி இருக்கும்,
எதுவும் நடவாததுபோல!
- 28062024





