
சுடர்கதை


ஒரு நேர்காணல்.
இவ் வருடம் மார்ச் மாதம் டென்மார்க் நாட்டுக்கு மலாலாய் ஜோயா வந்திருந்தார். 28 ஆடி 2016 இல் டெனிஸ் சஞ்சிகையான Gaia and Opinionen இற்காக டென்மார்க்கில் கல்விகற்கும் பல்கலைக்கழக மாணவனான Masih Sadat என்பவரால் எடுக்கப்பட்ட பேட்டியின் தமிழாக்கம் இது.
தமிழில் : ரவி

ஆப்கானின் “துணிகரமான பெண்மணி” என வர்ணிக்கப்படுபவர் மலாலாய் ஜோயா. 2005 இல் ஆப்கானின் -மேற்குலக செற்றப்புடன் அமைக்கப்பட்ட- பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராக இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துணிகரமான செயற்பாட்டாளர். அவர் அமெரிக்கா உட்பட மேற்குலகின் மீது கறாரான விமர்சனங்களை பொதுவெளியில் வைப்பவராக தொடர்ந்து இயங்குகிறார். அதனால் அவர் நோபல் பரிசுக்கு ‘உரியவரல்ல’. மேற்குலகால் விளம்பரப்படுத்தப்பட்ட Malala Yousafzai அவர்களைத் தேடி வந்ததுது போல மலாலாய் ஜோயாவை நோபல் பரிசு (இப்போதைக்கு) தேடி வராது. சமூக அரசியல் தளத்தில் செயற்படும் மலாலாய் ஜோயா Raising my voice என்ற நூலையும் எழுதியிருக்கிறார். 2010 இல் ரைம் சஞ்சிகை வெளியிட்ட உலகில் தாக்கத்தைச் செலுத்திய நூறு பேரின் வரிசையில் மலாலாய் ஜோய் உம் இடம்பெற்றுள்ளார்.

கிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது Pugilism என அழைக்கப்பட்டது.
ஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.
Continue reading “குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்”
– எனது வாசிப்பு
நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார் நிலையை தற்காலிகமாக அழித்துவிட்டு பாத்திரங்களின் கருத்துசார் நிலைக்கு மாறிக்கொண்டு எழுதுவது சுலபமானதொன்றல்ல. பொதுவில் தாம் சார்ந்த கருத்துநிலை இடையீடு செய்தபடியே இருக்கும். (எழுதுதலின்போது) அதைத் துறப்பது ஒருவித துறவு நிலைதான்.
(பான் பாய் சௌ அவர்களின் சிறைக் குறிப்புகள்)
// எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். // – Phan Boi Chau
கெட்ட வார்த்தைகள்.
(12 DECEMBER 2015)
சிம்புவின் பீப் பாடல் அவர்கள் எதிர்பார்த்தபடியே சர்ச்சையை பரிசளித்திருக்கும். அது அவர்களது பிம்பத்துக்கு தேவையானது. அது இருந்துவிட்டுப் போகட்டும்.
கெட்ட வார்த்தைகள் என்பதும் (தூசிக்கும்) தூசண வார்த்தை என்பதும் ஒன்றுதான் என நினைக்கிறேன். டொச் மொழியில் கடவுளை நிந்தனைசெய்வதான வார்த்தை, மலத்தோடு சம்பந்தப்படுத்தி ஊத்தையின் மீதான அருவருப்புத்தன்மையை பொருள்படுத்துகிற வார்த்தை என்பன கெட்ட வார்த்தைகளாக இருக்கிறன்றன. மலத் துவாரத்தை சுட்டும் வார்த்தையும் அதை குறியீடாக்குகிற நடுவிரலை நீட்டிக் காட்டும் சைகையும் அதிகபட்ச கெட்ட வார்த்தையாக இருக்கிறது. இதேபோல் நிறவெறியை சுட்டுகிற வார்த்தைப் பிரயோகங்களும் கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. (நானறிந்தளவு இதுதான். இன்னமும் இருக்கலாம்.)
உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என
குரலெழுகிற இதே உலகில்தான்
“மன்னித்துவிடு” என்று வேறு கேட்க வேண்டியுமிருக்கிறது.
அவலம்தானெனினும் கேட்டுக்கொள்வோம்
அதிகாரம் படைத்த சீமான்கள்
நவீன உலகில் வீற்றிருந்தபடி
ஆதியுலகத் தண்டனைகளை ஏவுகின்றனர்
அடிமைப்பட்டவர்கள்மேல்.
நாவல்தானே ஓர் ஓட்டமும் நடையுமாக கடைசிப் பக்கத்தை எட்டிப் பிடித்துவிடலாம் என்ற எனது எதிர்பார்ப்பைப் பார்த்து ஓரான் பாமுக் புன்னகைத்திருத்தல் கூடும். ஒருவேளை அதற்கும் ஒரு படிமத்தையும் பனிச் செதிலிலிருந்து உருவி எடுத்துக் காட்டியுமிருப்பார் அந்த மனுசன். பனியை எத்தனைவகையான குறியீடாக, படிமமாக பொரித்துக் காட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.
சுவிசிலிருந்து 5 ஆண்டுகளாக வெளிவந்த (மொத்தம் 30 இதழ்கள்) “மனிதம்“ சஞ்சிகையின் எட்டாவது இதழில் (nov-dec 1990) எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தின் முக்கிய பகுதி இது. புகலிட சஞ்சிகைகள் பலவும் இதுகுறித்து அப்போ புலிகளின் கெடுபிடியையும் தாண்டி குரல்கொடுத்திருந்தன. விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டு, புத்தளத்தில் இன்றும் அகதிகளாக கழித்துக்கொண்டிருக்கும் காலம் ஒரு கால் நூற்றாண்டை எட்டியிருக்கிறது. அதனை நினைவுபடுத்தும் முகமாக இங்கு தரப்படுகிறது.
– திரையொழுக்கு.
தீபன் படம் பிரான்சின் அறியப்பட்ட இயக்குநரான ஜாக் ஓடியார் அவர்களால் இயக்கப்பட்ட பிரெஞ்சுப் படம். 2015 இன் கன்னஸ் விருதான பல்மடோர் விருதை வென்றிருக்கிறது. படத்தின் நாயகன் தீபன், நாயகி யாழினி, குழந்தை இளையாள் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சுமார் எண்பது வீதமும் தமிழிலேயே வசனங்கள் போகிறது. அதனால் தமிழ் ரசிகருக்கு அருகில் படம் வருவதை புரிந்துகொள்ள முடியும். இக் காரணங்களால் (ஒரு குறிப்பிட்ட வட்டத்துள்) தமிழர்களால் இப் படம் பற்றி பேசப்படுவதும் அதன் விருது பற்றி பெருமை கொள்வதும் நடந்தேறுகிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியது.
அப்படியிருந்தும்கூட தமிழக சினிமாக்களுக்கு அலையாகச் செல்லும் நிலைமைபோலன்றி, ஐரோப்பிய திரையரங்குகளில் பெரும்பாலான ஐரோப்பியர்களும் கொசுறளவான தமிழர்களும் இவ்வாறான படங்களை திரையரங்குகளில் பார்க்கும் நிலைதான் உள்ளது. பிரசன்ன விதானகேயின் “பிறகு“ (With You Without You) என்ற படத்தையும் 2014 இல் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் பக்கத்து திரையரங்கில் ஓடிய “கத்தி“ திரைப்படத்துக்கு அலையாய் வந்திறங்கிக்கொண்டிருந்தனர். இதுதான் நமது சினிமா இரசனையின் இலட்சணம். திரையரங்கில் தீபன் படத்தை பார்த்துக்கொண்டிருந்த சுமார் 60 பேரில் நாம் 4 தமிழர்கள்தான் இருந்தோம்.