எப்போதுமில்லாதவாறு இந்த வருடம் ஒரு நீளமான கோடைகாலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் வெப்பமாக இருந்தது. இன்று வேறு அலுவல்கள் இல்லை. அல்லது அவற்றை முக்கியமற்றதாக்கிவிட்டு எனக்காக ஒதுக்கிக்கொள்வதான முடிவுடன் வேலையால் வந்துகொண்டிருந்தேன். உடலை உரசிய இதமான காற்றும் வெப்பமும் “அதைச் செய்” என்பதுபோல் சைக்கிளையும் வருடிச் சென்றது. இண்டைக்கு (உடற் பயிற்சிக்காக) ஓடுவம் என்று முடிவெடுத்தேன்.
Author: sudumanal
புரட்டு
மேற்குலகின் முப்பெரும் மதங்களாக கிறிஸ்தவத்தை, இஸ்லாமை, யூத மதத்தை முன்வைப்பதானது ஐரோப்பிய மையவாத சிந்தனை முறைமை ஆகும்.. இந்த வரலாற்றுப் புரட்டு ஐரோப்பாவின் மேலாளுமை உருவாக்கத்தை நிகழ்த்த அவசியமாகவே அவர்களுக்கு இருந்தது.
யூதமதம் தோன்றிய இஸ்ரேல் ஐரோப்பிவிலா இருக்கிறது?
கிறிஸ்தவ மதம் தோன்றிய ஜெரூசலம் ஐரோப்பிவிலா இருக்கிறது?
இஸ்லாம் மதம் தோன்றிய மத்திய கிழக்கு ஐரோப்பாவிலா இருக்கிறது?
எந்தத் தயக்கமுமில்லை !

03.06.1924 – 07.08.2018
ஊடுருவும் மொழியோசையை தமிழில் துய்ப்பதானால் கலைஞர் கருணாநிதியின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் இலக்கிய நயத்துக்கும் கட்டுண்டு போகிறேன்.
சோஃபியின் உலகம்
- நூல் மீதான வாசிப்பு
01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

சோபியின் உலகம்.
நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.
வாசிப்பும் உரையாடலும் -17
01.07.2018 (சுவிஸ்)
// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//

ஆகுமா?
இலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடிமக்கள் பெயர்ந்து இலங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.
விதைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.
துயர ஓவியம்
புலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.
பிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.
*
புலிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறோம்.
பிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.
மெல்ல சொல்லிவிடு காற்றே !
புகலிட நாடுகளிலிருந்து விடுமுறை போலவொரு நினைப்புடனும், வாழ்ந்து திளைத்த மண் அதன் மனிதத் தொடர்புகள் என ஒரு கலப்பான அனுபவத்தை பெறும் அங்கலாய்ப்புடனும் இலட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை போய் வருகிறார்கள். மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான வாழ்வும், அந்தந்த நாட்டு சமூகங்களோடு தகவமையும் (integration) ஆற்றலின்மை மற்றும் காலநிலை தருகிற ஒருவித அந்நியத்தன்மையும் அவர்களுக்கு இவ்வாறான பயணத்தைத் தூண்டுகின்றன. அது புரிந்துகொள்ளப்படக்கூடியது.
பிம்பங்களைச் சிதைப்போம்
// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.// – 06.05.18, FB
இந்த முகநூல் குறிப்பு இயக்கத்தை அகநிலையில் வைத்துப் பார்த்து எழுதப்பட்ட ஒன்று. இதற்கு வந்திருந்த பக்குவமான பின்னூட்டங்கள் ஒரு விரிவான பதிவை செய்ய வைத்திருக்கிறது.