ஜோசப் விஜய் ஆகிய நான்..!

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் வந்தது குறித்த நியாயத்தை “ஏன் அவர் வரக் கூடாது” என்ற ஒற்றை எதிர்க் கேள்வியால் அணுகுவது சுத்த அபத்தமானது. ஏழு கோடி மக்களின் ஆட்சித் தலைவராக ஒருவர் வருகிற மிகப் பெரும் பொறுப்பை குறுக்கி, இப்படி கேட்க வைப்பதற்கான அடிநாதம் இந்த ஜனநாயக முறைமையை எளிதாக்கிப் புரிந்துகொள்வதுதான் என சொல்ல முடியும். வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகம் அல்ல. அது மக்களின் ஜனநாகக் கடமை. அவர்களின் உரிமை. மறுபக்கத்தில், தேர்தல் என்பது ஜனநாயகக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான செயல்முறை. அதாவது, பெரும்பான்மையை வைத்து வெற்றியை தீர்மானிப்பது ஒரு நிர்வாக அடிப்படையிலான ஜனநாயக கட்டமைப்பின் ஒரு நடைமுறை அம்சம். அதனால் அரசாங்க உருவாக்கமானது அந்த கட்டமைப்பினூடாகவே தீர்மானிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

Continue reading “ஜோசப் விஜய் ஆகிய நான்..!”