பெப்ரவரி-4

இந்தக் கொடியை நான் எரிப்பதாயில்லை.
எரிப்பதாயின் முதலில் என் இலங்கை கடவுச் சீட்டை எரித்தாக வேண்டும்.
இந்தக் கொடியை நான் ஏற்றுவதாயில்லை.
ஏற்றுவதாயின் முதலில் பேரினவாதத்தை அவர்கள் இறக்கியாக வேண்டும்.
இந்தக் கொடிக்கு நான் நிறங்களும் தீட்டுவதாயில்லை.
தீட்டுவதாயின் முதலில் அவர்கள் என் தூரிகையைத் தரவேண்டும். !

Continue reading “பெப்ரவரி-4”