பிச்சைப் பாத்திரம்

கல்லூரியொன்றில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கணித ஆசிரியர் கேத்திரகணித தேற்றம் ஒன்றை நிறுவிக்காட்ட வகுப்பை ஏவினார். நான் சரியாகத்தான் நிறுவியிருந்தேன். ஆனால் வகுப்பின் முன்னால் நிற்கவைத்து பிரம்பால் தாக்கப்பட்டேன். “கேத்திரகணித புத்தகத்தில் ABC ஒரு முக்கோணம் என சொல்லி இத் தேற்றம் நிறுவப்பட்டிருக்கிறது. நீ XYZ ஒரு முக்கோணம் என போட்டு நிறுவியிருக்கிறாய். நீ எங்கையோ ரியூசனுக்குப் போகிறாய்” என்று அடித்தார். சிறிமாகால பஞ்சத்தில் இரண்டு வேளை கொஞ்சமாகச் சாப்பிடுவதே போராட்டமாயிருந்தபோது எங்கை ரியூசனுக்குப் போவதாம். இல்லை என்று மட்டும் சொன்னேன். அடியை வாங்கினேன். மாற்றி யோசிக்க நினைத்துப் பார்க்கக் கூடாதா என்ற உள்மனக் கேள்வியுடன் போய் அமர்ந்தேன்.

Continue reading “பிச்சைப் பாத்திரம்”