தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புலிகளின் தலைவர் பிரபாகரனால் கொலைசெய்யப்பட்ட தினம் இன்று. தனது 36 வது வயதில், அவன் சித்ரா பதிப்பகத்தின் வாசலில் வைத்து மௌனமாக்கப்பட்டான். புதியபாதை பத்திரிகை அலுவலாக அச்சகத்தின் முன்புறம் அமர்ந்திருந்து வேலைசெய்துகொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்.